Quantcast
Channel: Dial for Books
Viewing all 3876 articles
Browse latest View live

நிழல் இளவரசி

$
0
0

நிழல் இளவரசி, இந்து சுந்தரேசன், தமிழில்-மதுரம் சுந்தரேசன், வானதி பதிப்பகம், பக். 512, விலை 250ரூ.

பரந்து விரிந்திருந்த முகலாய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தை, கைப்பற்ற ஷாஜஹான் மிகக் கடுமையாகப் போரிட்டு ஈவிரக்கமில்லாமல், தன் சொந்த சகோதரர்கள், உடன் பிறவா சகோதரர்கள் மற்றும் மருமகன்கள் என்று எல்லாரையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு, முடி சூட்டிக் கொள்கிறார்.

காதல் மனைவி மும்தாஜ் உடன்கூடிக் களித்து, பதினான்கு குழந்தைகளைப் பெறுகிறான். நாவல் ஆரம்பத்திலேயே மும்தாஜ், தன் 38 வயதில் பதினாலாவது குழந்தையை பெற்று விட்டு இறந்துபோகிறாள்.

தந்தையை கவனித்துக் கொள்வதிலிருந்து, அந்தப்புரத்தை நிர்வகிக்கும் பொறுப்பு வரை, மூத்தமகள் ஜஹனராவிற்கும், இரண்டாவது புதல்வி ரோஷனாவிற்கும் ஏகப் போட்டி.

ஜஹனராவே வெல்கிறாள். ஷாஜஹானின் மகன் அவுரங்கசீப், தன் தந்தை எப்படி அரியணையைக் கைப்பற்றுகிறாரோ, அதேபோல் தானும், தன் சகோதரர்கள் அனைவரையும் தீர்த்துக்கட்டிவிட்டு முடி சூட்டிக் கொள்கிறார்.

தந்தையை கொல்லவில்லை. மாறாக சிறை வைக்கிறார். தாஜ்மஹால் உருவான விதம் மிக விரிவாக அழகாக சொல்லப்பட்டுள்ளது. தமிழாக்கம் ஒரே சீராக, தங்கு தடையின்றிச் செல்கிறது. சரித்திர நாவல் பிரியர்கள் தவற விட்டுவிடக் கூடாத நாவல்.

-மயில் சிவா.

 

—-

 

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள், காம்கேர் கே. புவனேஸ்வரி, விகடன் பிரசுரம், பக். 240, விலை 100ரூ.

இது, கம்ப்யூட்டர் யுகம், அதில் சைபர்கிரைம் எனப்படும் நவீன நரகாசுரன் புரியும் அட்டகாசங்கள் பயங்கரமானவை. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், பேஸ்புக், டிவிட்டர், பிளாக் போன்றவற்றை பயன்படுத்தும்போது எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அவற்றில் பிரச்னை ஏற்பட்டால், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, யாரை எவ்வாறு அணுக வேண்டும் போன்ற பல நுணுக்கமான விஷயங்களை தெளிவாகப் புரிந்து கொள்ளும்விதத்தில், எழுதியிருக்கும் ஆசிரியர், கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர், அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

-சிவா.

நன்றி: தினமலர், 26/1/2014.


சிலம்பில் ஈடுபட்டது எப்படி

$
0
0

சிலம்பில் ஈடுபட்டது எப்படி, ம.பொ. சிவஞானம், ம.பொ.சி. பதிப்பகம், பக். 96, விலை 50ரூ.

சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுவதற்கு காரணமாக அமைந்த உணர்வுகளை, மனம் திறந்து ம.பொ.சிவஞானம் பேசும் நூல். மனைவி ராஜேஸ்வரி, நான் கண்ணகியாய், ஆங்கிலேய ஆட்சியை எதிர்ப்பேன் என்று கூறிய வீரவுரையைக் கேட்ட பிறகு ம.பொ.சி இந்த தலைப்பில் நீண்ட ஆய்வு செய்து இந்த நூலை அவருக்கே அஞ்சலி ஆக்கியுள்ளார்.

1934ல் வெளியான நவீன கோவலன், 1946ல் கண்ணகி, 1966ல் பூம்புகார் ஆகிய திரைப்படங்களால் சிலப்பதிகாரம் தமிழர்களிடையே செல்வாக்கு பெற்றதை சிறப்புடன் விளக்கியுள்ளார். தெருவெங்கும் சிலப்பதிகாரத் தமிழ் முழக்கம் செய்து வெற்றிகண்ட ம.பொ.சி.யின் போராட்டப் பதிவு நூல்.

-முனைவர் மா.கி.ரமணன்.

 

—-

 

தொல்காப்பியத்தின் வீரநிலைக் கால எச்சங்கள், கு.வெ. பாலசுப்பிரமணியன், தமிழ்ப்பேராயம், பக். 112, விலை 70ரூ.

கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தொல்காப்பியத்தில், சொல்லப்பட்டுள்ள, தமிழர்களின் வீரநிலை பற்றிய செய்திகள் மிகக் குறைவானவை.

தொல்காப்பியத்திற்கும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது, தமிழர்களின் வீரநிலைக் காலம் என்பதை, இந்த நூல் ஆதாரங்களுடன் தருகிறது. வீரநிலைக் காலம் என்பது சமயமும், தத்துவமும் தோன்றாத காலம். அந்தக் காலம் இனக்குழுக் காலம். இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையைப் போர் என்பது பொருந்தாது.

அதை பூசல் என்றே தெரிவிக்க வேண்டும் முதலான செய்திகளை அழகாகத் தெரிவிக்கிறது இந்த நூல். பிராகிருத மொழிக்கு, இலக்கணம் வகுத்த சாகடாயணரும், சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் வகுத்த பாணினியும், தொல்காப்பிய இலக்கணத்தை அறிந்து இலக்கணம் வகுத்துள்ளனர் எனத் தெளிவுபடுத்தியுள்ளார் கு.வெ.பா.

-முகிலை ராசபாண்டியன்.

நன்றி: தினமலர், 26/1/2014.

நுனிப்புல் மேய்தல்

$
0
0

நுனிப்புல் மேய்தல், சுவிஸ் மர்த்தி மாஸ்ரர், காந்தளகம், பக்.176, விலை 100ரூ.

பிறந்த நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்து, அயல் நாடுகளில் அடைக்கலம் புகுந்தவர்கள், அங்கே படும் அவலங்களையும், வேதனைகளையும் அனுபவித்து, அவற்றை எழுத்தில் வடித்துள்ளார் ஆசிரியர். படித்தால், இதயத்தைக் கனக்கச் செய்யும் புத்தகம்.

-சிவா.

 

—-

 

ஜோதி நுணுக்கங்கள், டி.கே. சந்திரசேகரஐயர், மேகதூதன் பதிப்பகம், பக். 200, விலை 100ரூ.

ஒருவரது ஜாதகத்தின் மூலம் ஜனன காலத்திலிருந்து, பலன்களை அறிவதற்கான மிக முக்கியமான மற்றும் அடிப்படையான அம்சங்களை (ராசி, திதி, நவாம்சம், மூலத்திரிகோணம், கேந்திராதிபத்ய தோஷம், கிரகங்களின் பார்வை, பரிவர்த்தனை, அஸ்தங்கம், வக்ரகதி) ராசி கட்டங்களில் அமைத்து விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

புத்தகத்தின் பிற்சேர்க்கையில், வள்ளலார் அருளிய நோய் அணுகாதிருப்பதற்கான விதிமுறைகளையும் சேர்த்திருப்பு சிறப்பு. ஜோதிடம் பயில்வோருக்கு, மிகவும் பயனுள்ள நூல்.

நன்றி: தினமலர், 26/1/2014.

சங்க இலக்கியம் சில பார்வைகள்

$
0
0

சங்க இலக்கியம் சில பார்வைகள், டாக்டர் சி. பாலசுப்பிரமணியம், பாரி புத்தகப் பண்ணை, 90, பிராட்வே, சென்னை 600108, பக். 248, விலை 90ரூ.

பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியன் தமிழின் ஆழத்தையும், அகலத்தையும் ஆய்ந்து, அளந்து எழுதியுள்ள ஆராய்ச்சி நூலிது.

தமிழகத்தின் தொன்மையும், சங்க காலச் சிறப்பும், பதிற்றுப்பத்தின் இலக்கிய வளமும், ஆற்றுப்படை இலக்கியத்திறனும், பாடாண் திணை, கதிரவன் ஒளி, அணி நயங்கள், வணிகத் தொன்மை, இசை மேன்மை, இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் ஆகிய பன்முகச் சிந்தனைகளில், ஆய்வுக் களம் அமைத்து நூலை எழுதியுள்ளார்.

குமரி மலையும், குமரி ஆறும், பழந்தமிழ் நாகரிகத்தின் அடையாளங்கள் எனவும் கூறுகிறார்.

ஆதிசிவன் பெற்றெடுத்து, அகத்தியர் வளர்த்தது தமிழ்மொழி என்று பெருமை பேசுகிறார். கதிரவன் பற்றிய சங்க இலக்கியச் செய்திகளை அழகாகத் தொகுத்துத் தந்துள்ளார்.

அவிரொளி, வெய்யவன், பகலோன், பரிதி, விரிகதிர், இரவி, ஏழயபரித் தேரோன், காய்கதிர்ச் செல்வன், ஞாயிறு ஆகிய சொற்கள், சூரியனுக்கு புகழ் சேர்க்கின்றதைப் பட்டியல் இட்டுள்ளார்.

பசுவின் பால் கன்றுக்கும், மனிதனுக்கும் பயன்படாது வீணாக தரையில் சுரபப்துபோல, தலைவியின் அழகு அவளுக்கும் பயனின்றி, தலைவனுக்கும் பயனின்றி வீணாவதை குறுந்தொகை, 27ஆம் பாடல் உவமையால் விளக்குகிறார்.

இலக்கியத்தில், அறிவியல் சிந்தனைகள் இறுதி கட்டுரை இனிக்கிறது. சி. பாலசுப்பிரமணியன் என, பெயரை முகப்பு அட்டையில் சி. சுப்பிரமணியன் என்று சுருக்கி வெளியிட்டுள்ளது விரிவான தவறுதானே?

நன்றி: தினமலர், 26/1/2014.

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம்

$
0
0

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம், தி. குலசேகர், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600083, விலை ரூ. 150

ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்த மாபெரும் கலைஞன் சார்லி சாப்ளின். சினிமாவில், தான் பேசாமலேயே தன்னை எல்லோரும் வியந்து பேசும்படி மௌன மொழியில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திக்காட்டியர்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்த இவரது ஆரம்பகால வாழ்க்கை, வேதனைகளும், சோதனைகளும் நிரம்பியவை.

வறுமைக்கும், மாற்றந்தாயின் கொடுமைக்கும் இடையே இவரும், இவரது அண்ணனும் வளர்ந்த விதத்தையும், தந்தையின் புறக்கணிப்பால் மன நோயாளியாகிப்போன தாயைக் காப்பாற்ற அந்த சிறுவயது சகோதரர்கள் பட்ட பாடுகளையும் படிப்பவர்களை கண் கலங்கச் செய்யும்.

வாழ்க்கையின் அடித்தட்டிலிருந்து உலகின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த இவரது வரலாறு, தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு.

இந்நூலாசிரியர் தமிழ் திரைப்படத் துறையில் உதவி இயக்குனராகவும், பல பத்திரிகைகளிலும் சிறு கதைகள், குறு நாவல்களைப் படைத்த எழுத்தாளராகவும் உள்ளதால், வாசகர்களின் கவனம் சிதறாமல் படிக்கும்படி இந்நூலை விறுவிறுப்பாக ஆக்கியுள்ளார்.

1914ல் இருந்து 1967 வரை சார்லி சாப்ளின் சுமார் 95 படங்களில் நடித்துள்ளார். அவற்றில் சிறப்பான 50க்கும் மேற்பட்ட படங்களின் கதை சுருக்கமும், அதற்குரிய ஃபோட்டோ ஸ்டில்களும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, அவரது சில பிரத்யேகத் தகவல்களும் படிக்க சவையானது.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 17/10/2012

 

—-

 

குமரகுருபரர் யாப்பியல், மு. கஸ்தூரி, இளவேனில் பதிப்பகம், பக். 240, விலை 140ரூ.

300 ஆண்டுகளுக்கு முன், முருகன் அருளால் பாடத் துவங்கியவர் குமரகுருபரர். ஊமையாகப் பிறந்து, செந்தூர் முருகனால் பாடல் இயற்றும் அருள் பெற்றார். திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பாவில் பாடி செந்திலாண்டவர் அருளையும், மீனாட்சி பிள்ளைத் தமிழ்பாடி மீனாட்சி அருளையும் பெற்றவர்.

14 இலக்கியங்கள் பாடியவர். இவர் பாடிய 823 பாடல்களிலும் விளங்கும் இலக்கண யாப்பு அமைப்பினை, இந்த நூல் விரிவாக ஆய்கிறது.

முனைவர் பட்டம் பெற்றுத்தந்த ஆய்வேடு நூலாக மலர்ந்து உள்ளது. கோவை, கலம்பகம், மாலை, பிள்ளைத் தமிழ், குறம் போன்ற எட்டு இலக்கிய வகைகளை இயற்றி அதற்கான இலக்கண யாப்பினையும் விரிவாக்கியுள்ள, குமரகுருபரனின் இலக்கணப் புலமையை இந்நூலில் காணலாம்.

-முனைவர் மா.கி. ரமணன்.

நன்றி: தினமலர், 26/1/2014.

செவ்வியல் இலக்கிய மணி மாலை

$
0
0

செவ்வியல் இலக்கிய மணி மாலை, ம.சா. அறிவுடை நம்பி, கருமணி பதிப்பகம், புதுச்சேரி 8, பக். 320, விலை 160ரூ.

தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நடைபெற்ற கருத்தரங்கம், பயிலரங்கம் ஆகியவற்றில் படிக்கப்பட்ட கட்டுரைகள். தினமணி, தமிழ் ஓசை ஆகிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள், அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான சொற்பொழிவு என மொத்தம் 15 கட்டுரைகளால் கோக்கப்பட்ட இலக்கிய மணிமாலை.

இலக்கணம், இலக்கியம், அறநெறி, அரசியல், அறிவியல், மதுவிலக்கு, பழந்தமிழர் வாழ்வு, விருந்தோம்பல், கனவுகள், சிந்தனைகள், இசைக்குறிப்புகள் என்ற இவை அனைத்தையும் உள்ளடக்கிய கட்டுரைகளின் சாரம் செவ்வியல் இலக்கியத்துக்கச் செழுமை சேர்த்துள்ளன.

தமிழ் இலக்கியங்களில் இசைநிறைக்கிளவிகள், காப்பியங்களில் கனவுகள் ஆகிய கட்டுரைகள் ஒருமுறைக்கு இருமுறை படித்துச் சுவைக்கலாம்.

அந்தந்த பக்கத்திலேயே அதற்கான அடிக்குறிப்புகளைத் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. பழந்தமிழ் இலக்கியம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் இளம் ஆய்வாளர்களுக்கான சிறந்த வழிகாட்டி நூல்.

தமிழ் இலக்கியங்களில் மதுவிலக்கு என்ற கட்டுரை 18/1/2009இல் தினமணி தமிழ்மணியில் வெளியாகி, பின் அதே கட்டுரை 21/7/2009இல் தமிழ் ஓசை பத்திரிகையிலும் வெளியாகியுள்ளது.

இனிமேலும் இத்தவறு நிகழாமல் பார்த்துக்கெள்வது நல்லது.

நன்றி: தினமணி, 22/10/2012.

 

—-

 

குடியாத்தம், முல்லைவாசன், ஆழிபதிப்பகம், 1ஏ, திலகர்தெரு, பாலாஜி நகர், துண்டலம், அய்யப்பன்தாங்கல், சென்னை 77,விலை 60ரூ.

ஆழி பதிப்பகம், தமிழின் முதல் முயற்சியாக தமிழகத்தின் முக்கிய ஊர்களின் வரலாற்றை, தகவல்களை அந்தந்தப் பகுதி எழுத்தாளர்களைக் கொண்டே எழுதி வெளியிட்டு வருகிறது.

அந்த வரிசையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பற்றி வெளிவந்திருக்கும் நூல் இது. விடுதலைப் போரில் குடியாத்தம், சமூகமும் கலாச்சாரமும் பிரபலமானவர்கள் ஆகிய அத்தியாயங்கள் சுவை மிக்கவை.

நன்றி: இந்தியாடுடே, 17/10/2012.

நாட்டு வைத்திய களஞ்சியம்

$
0
0

நாட்டு வைத்திய களஞ்சியம், கொ.மா. கோதண்டம், நிவேதிதா பதிப்பகம்,சென்னை 94, பக். 304, விலை 175ரூ.

எடுத்தற்கெல்லாம் ஊசி மாத்திரை என்று ஓடாமல், ஒரு தலைவலிக்குக்கூட ஐம்பது, நூறு என்று செலவு செய்யாமல் வீட்டு அருகில் முளைத்திருக்கும் துளசி போன்ற செடிகளின் இலைகளாலும், வீட்டில் இருக்கின்ற மிளகு, சுக்கு போன்றவற்றினாலும் நமக்கு நாமே எளிய முறையில் செய்து கொள்ள உதவும் இனிய மருத்துவமே, மூலிகை மருத்துவம் என்று சொல்கிற நூலாசிரியர், இந்நூலில் சித்த மருத்துவ அடிப்படையில் பல்வேறு நோய்களுக்கு எளிமையான மருத்துவத்தைச் சொல்லியிருக்கிறார்.

தலைவலி, வயிற்றுவலி, காதுவலி, வாயுத்தொல்லை, நரம்புத் தளர்ச்சி, பெண்களின் நோய்கள், குழந்தைகளின் நோய்கள் போன்ற பல நோய்களை மூலிகைகளின் துணையோடு எவ்வாறு விரட்டியடிக்கலாம் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

தலைவலிக்கு மாத்திரைகளைத் தேடாமல் இரண்டு துளி வெற்றிலைச் சாறை மூக்கில்விட்டால் போதும், பாலில் பூண்டைச் சேர்த்து உண்டு வர இரத்தக் கொதிப்பு குணமாகும் என்பன போன்ற எளிய மருத்துவக் குறிப்புகள் நிறைந்துள்ளன.

மருந்துகளைச் சுத்தி செய்யும் முறைகள், நாட்டு மருந்துகிள் மருத்துவ குணங்கள் போன்றவற்றையும் விளக்குகிறார். மருத்துவம் செய்து கொள்வது அதிகச் செலவு பிடிக்கும் ஒன்றாக ஆகிவிட்ட இக்காலத்தில், மிகக் குறைந்த செலவில் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் உடல் நோய்களை நீக்கிக் கொள்ள உதவும் சிறந்த நூல்.

நன்றி: தினமணி, 22/10/2012.

 

—-

 

எவரும் செய்யலாம் ஏற்றுமதி, வீ. அரிதாசன், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை, விலை 100ரூ.

ஏற்றுமதி செய்வது பற்றிய அடிப்படையான ஐயங்கள் உள்ளவர்களுக்கான நூல் இது. எளிய பின்னணியில் இருந்து தற்போது ஏற்றுமதி தொழில் சாதிப்பவர்களின் நேர்முகங்களும் இடம் பெற்றிருப்பது சிறப்பு.

இறக்குமதியாளர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த துப்பறியும் நிறுவனங்களைப் பயன்படுத்தும் விதமும் விளக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகங்களின் முகவரிகளும் அடங்கியுள்ளன.

நன்றி: இந்தியாடுடே, 17/10/2012.

ஸ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா

$
0
0

ஸ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா, வேணுசீனிவாசன், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 360, விலை 200ரூ.

ஸ்ரீ வைஷ்ணவ தத்துவத்தைப் பற்றிய பலவிதமான புரிதல்களையும் புகட்டும் நல்ல தொகுப்பு. நான்கு பகுதிகளில் அனைத்தையும் விளக்க முற்பட்டுள்ளார் நூலாசிரியர்.

வைஷ்ணவம் என்பதன் விளக்கம், வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கான தத்துவங்கள், இவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக அவதரித்த ஆழ்வார்கள், அவர்களின் கருத்துக்களுக்கு விளக்கங்களைச் சொல்லி மக்களிடையே பரப்பிய ஆச்சார்யர்கள் எனக் கச்சிதமாக நான்கே பகுதிகளில் மொத்தமும் அடக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சமயத்தின்பால் பற்று கொண்டு கடைப்பிடிக்கும் சாதாரண பக்தன் ஒருவன், அதைப் பற்றிய புரிதல்களும் ஞானமும் கொண்டிருக்க வேண்டும். அதை இந்த நூல் நிச்சயம் கொடுக்கிறது எனலாம்.

வேதங்களில் வைணவம், தமிழ்நாட்டின் சங்க இலக்கியம், தொல்காப்பியம் இவற்றில் வைணவமும் திருமால் வழிபாடும், வைணவமும் வாழ்க்கையும், விசிஷ்டாத்வைத தத்துவமும், அவற்றில் பொதிந்துள்ள ரஹஸ்யத்ரயம் எனப்படும் முப்பொருள் உண்மை, மூன்று மந்திரங்கள், அர்த்தபஞ்சகமாகிற ஐம்பொருள் தத்துவம், குறிப்பாக வைணவத்துக்கு ஆதாரத் தத்துவமாகிற சரணாகதித் தத்துவம் இவை அனைத்தும் இந்த நூலில் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது சிறப்பு.

ஆழ்வார்கள், ஆசார்யர்களின் வாழ்வில் செய்திகள், வைணவ தத்துவ ஞானத்தை எளிமையாக விளக்குகின்றன. உண்மையில் இது ஓர் என்சைக்ளோபீடியா என்று சொல்வதற்குத் தகுதியான நூலாகவே திகழ்கிறது.

நன்றி: தினமணி, 22/10/2012.

 

—-

 

ஹலோ டாக்டர், தொகுப்பு-கீதா, புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி. இண்டஸ்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை, விலை 100ரூ.

புதிய தலைமுறை வார இதழில் வெளியான உடல் நலம் தொடர்பான கேள்விபதில்களின் தொகுப்பு இது. எல்லா வயதினரும் இதில் தங்கள் உடல்நலம் குறித்த ஐயங்களை எழுப்பியிருக்கிறார்கள்.

அவற்றுக்கு உரிய மருத்துவ வல்லுநர்கள் (அலோபதி, சித்தா, ஹோமியோபதி முதலான) விரிவான விடை அளித்திருக்கிறார்கள். தியானம், உடற்பயிற்சி முதலியவை தொடர்பான கேள்வி பதில்களும் இடம் பெற்றிருக்கின்றன.

நன்றி: இந்தியாடுடே, 17/10/2012.


கலிங்கத்துப் பரணி

$
0
0

கலிங்கத்துப் பரணி, ஆ.வீ. கன்னைய நாயுடு உரை, முல்லை நிலையம், சென்னை 17, பக். 392, விலை 175ரூ.

ஆயிரம் யானைகளை போரில் வென்ற ஆண்மை வாய்ந்த தலைமகனைச் சிறப்பித்துப் பாடுவத பரணி. தொண்ணூற்று வகை பிரபந்தங்களுள் ஒன்று. தமிழ்த் தரணி போற்றும் பரணிகள் பல உள்ளன.

எனினும், பரணி என்றதுமே நினைவுக்கு வருவதும், முதன்மையானதும் ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணியே. இதற்கு பலர் உரை எழுதியுள்ளனர்.

ஆனால், படிப்போர் மிக எளிதாய்ப் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லுக்குச் சொல் என்ற அளவில் பதவுரையும், நீரோடை போன்ற சீரான, அழகிய விளக்கவுரையும் தந்துள்ளார் இந்நூலாசிரியர்.

மேலும் பாடல்களில் இடம் பெற்றுள்ள பலவகை அணிகள், இலக்கணக் குறிப்புகள், ஒன்பது வகை சுவைகள், புறப்பொரள் துறைகள் போன்றவையும் முழுமையாகவும், தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

நூலின் இறுதியில் தாழிசை முதற்குறிப்பு அகராதி கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு. எவருடைய உதவியுமின்றி மாணவர்களுக்கு மட்டுமல்ல, பரணி படிக்க விழையும் அனைவருக்குமே இந்நூல் நல்ல வழிகாட்டி. எந்தக் காலத்துக்கும் படித்து சிலாகிக்க வைக்கும் அந்தக் கால பரணிக்கு இந்தக் காலத்துக்கேற்ப எழுதப்பட்ட உரை நூல்.

நன்றி: தினமணி, 22/10/2012.

 

—-

 

எம்.ஜி.ஆர். கவிதைகள், கவிஞர் பிறைசூடன், குமுதம் பு(து)த்தகம், பக். 174, விலை 110ரூ.

எம்.ஜி.ஆர். என்ற மகத்தான மனிதரின் அன்பு, வீரம், கொடை உள்ளிட்ட அத்தனை பண்புகளையும் கவிதைகளாக வடித்திருக்கிறார் கவிஞர் பிறைசூடன். இக்கவிதைகள் எல்லாமே எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த காலத்தில் எழுதப்பட்டு, அவரால் பாராட்டப்பட்டு, அவரே நூல் வடிவமாக்கவும் விருப்பம் தெரிவித்திருந்தாராம்.

ஆனால் எம்.ஜி.ஆரின் மரணத்தால் அது நிறைவேறாமல் போய்விட்டது. அதன் பிறகு குமுதம் பு(து)த்தகம் வெளியீடு அதனை வெளியிட்டிருப்பது சிறப்பு. எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு இக்கவிதைகள் ஒரு வரப்பிரசாதம்.

நன்றி: குமுதம், 17/10/2012.

மரபும் மரபு சார்ந்தும்

$
0
0

மரபும் மரபு சார்ந்தும், முனைவர் ஓ. முத்தையா, காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை 24, பக். 204, விலை 160ரூ.

கள்ளிக்காட்டில் முள்ளை வெட்டி அடுக்கிக் கொண்டிருந்த வேலாயி இடுப்புவலி எடுத்து வேலி மறைவில் தனது மூன்றாவது பிள்ளையைத் தனியாளாய் பெற்றெடுத்தாள்.

மரபு அவளுக்கு அத்தகைய வலிமையைக் கொடுத்திருக்கிறது. இன்றைய நவீன மருத்துவம் தாய்க்கும் பிள்ளைக்கும் தனித்தனியே கட்டணம் வசூலித்து கட்டாயக் கத்திரி போடுகிறது.

மரபு தரும் இந்த வலிமையையும் துணிச்சலையும் மண்மூடிப் போகும்முன் பாதுகாக்கவாவது செய்யலாமே? என்பதுதான் நூலாசிரியரின் வேண்டுகோள். நாட்டுப்புற ஆய்வு மாணவர்களுக்குப் பயனுள்ள நூல்.

-இரா. மணிகண்டன்.

நன்றி: குமுதம், 17/10/2012.

 

—-

 

எண்ணெய் மற மண்ணை நினை, வந்தனா சிவா, தமிழில்-போப்பு, பூவுலகின் நண்பர்கள், சென்னை 26, பக். 212, விலை 120ரூ.

உலகம் எங்கும் உற்பத்தி முறை மாறிவிட்டது. இது நமது கலாசாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் எல்லாரும் நிலத்திலிருந்து அந்நியப்பட்டவர்களாக மாறிவிட்டோம் என்று கூறும் நூல்.

புவி வெப்பமாதல், பருவப் பிறழ்வு போன்றவை சுற்றுச் சூழலை நாம் காக்கத் தவறிவிட்டதால் இயற்கை நமக்குத் தந்துள்ள தண்டனைகளாகும் என்றும், இயற்கையுடன் இயைந்து செல்வது ஒன்றுதான் மனித குலத்தின் முன் உள்ள ஒரே சரியான பாதை என்றும் கூறும் நூல்.

உலகின் இயக்கத்துக்கு அவசியமான கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் முதற்கொண்டு வானத்தில் ஓசோன் மண்டலத்தில் ஏற்படும் ஓட்டை வரை ஒன்றிற்கொன்று இருக்கும் தொடர்புகளை இந்நூலில் நூலாசிரியர் வந்தனா சிவா விளக்கியிருக்கிறார்.

ஒன்றில் ஏற்படும் பாதிப்பு ஒரு சங்கிலித் தொடர்போல பிறவற்றையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார். நமது விவசாயமுறை சுயசார்பான விவசாயமாக இருந்ததுபோய், விவசாயம் தொழிற்சாலைகளை அவை தரும் உரத்தை பூச்சிக்கொல்லி மருந்துகளை, விதைகளைச் சார்ந்து இயங்கத் தொடங்கியதே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூலகாரணம். விவசாயத்தை, உணவைத் தொழில் மயப்படுத்தியதால் மனித குலம் இன்று சுய அழிவின், சுய விலகலின் சறுக்குப் பாதையில் நிற்கிறது என்கிறார் நூலாசிரியர்.

காந்திய சூழலிய, அரசியல், பொருளாதாரப் பார்வையின் அடிபப்டையில் எழுதப்பட்டிருக்கும் சிறந்த நூல்.

நன்றி: தினமணி, 22/10/2012.

சுவாமி விவேகானந்தர் வரலாறு

$
0
0

சுவாமி விவேகானந்தர் வரலாறு, அ.லெ. நடராஜன், பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 655, விலை 360ரூ.

சுவாமி விவேகானந்தரின் தெய்வீக வலாற்றைக் கூறும் இந்நூலைத் தொடர்ந்து படிக்கும்போது சாதாரண மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பசி, பட்டினி, வறுமை, குடும்ப சொத்து தொடர்பான நீதிமன்ற வழக்கு, ஏளனம், பரிகாசம், அவமதிப்பு அத்தனையையும் சுவாமி விவேகானந்தர் சந்தித்தார் என்பது தெரிகிறது.

அதேபோல் 11/9/1983இல் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற உரையை ஆற்றுவது வரையிலும் கூட அவர் சந்தித்த சோதனைகள் ஏராளம்.

உள்நாடாக இருந்தாலும் சரி, வெளிநாடாக இருந்தாலும் சரி எவர் முன்னிலையிலும் தனது மனதில் சரியெனப்பட்டதையும் தயக்கமின்றி ஆணித்தரமாக எடுத்துரைப்பதில் விவேகானந்தர் மாபெரும் வீரராக மகத்தான ஞானியாக விளங்கினார்.

ஜாதி உணர்வைக் கடந்து ஒழுகும் பரிபக்குவம் தனக்கு இருக்கிறதா என்பதை ஒவ்வொரு கணமும் சந்நியாசி கவனிக்க வேண்டும் என்கிறார். அவரது வார்த்தைகளில் தெய்வ பக்தி மட்டுமின்றி, தேச பக்தியும் பின்னிப் பிணைந்திருந்ததை உணர முடிகிறது.

இமயம் முதல் குமரி வரை பயணம் செய்து ஆன்மிக யாத்திரை புரிந்த சுவாமி விவேகானந்தரின் பெருமையை முதலில் உணர்ந்து, அவரைக் கொண்டாடிப் போற்றியவர்கள் சென்னை வாசிகள் என்பதை அறியும்போது தமிழர்களாகிய நாம் பெருமை கொள்ளலாம்.

இந்தப் புத்தகம் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய பொக்கிஷம்.

நன்றி: தினமணி, 13/1/2014.

 

—-

 

வாழ்ந்து படிக்கும் பாடங்கள், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், எண் 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 110ரு.

கற்பனையில்கூட எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறி இருக்கிறது. ஆனால் சமூக சீர்கேடுகள் பெருகிவிட்டன. அறிவியலில் அற்புதங்களை எட்டியபோதிலும், மனிதனின் மனதில் மகிழ்ச்சி இல்லை.

அனுபவங்கள் கற்றுத்தரும் பாடங்களே இன்றைய மனிதன் தேடும் நிறைவான வாழ்க்கைக்கு ஆதாரமாக அமையும் என்பதை எழுத்தாளர் என். கணேசன் இந்த நூலில் விளக்கியுள்ளார். நிறைவான வாழ்க்கை வாழ நிறைய செய்திகள், சோதனைகளை வென்றெடுக்க பல சாதனை நிகழ்ச்சிகள்.

நன்றி: தினத்தந்தி, 8/1/2014.

ஒரு சாமானியனின் நினைவுகள்

$
0
0

ஒரு சாமானியனின் நினைவுகள், க. இராசாராம், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 250ரூ.

தமிழ்நாட்டின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் க. இராசாராம். சட்டசபை சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்தவர். தி.மு.க.வில் இருந்தாலும், அ.தி.மு.க.வில் இருந்தாலும் காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு.

தமது அனுபவங்கள் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள், ஒரு சாமானியனின் நினைவுகள் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது இதில், பல முக்கியமான அரசியல் நிகழ்ச்சிகள் மூடி மறைக்கப்படாமல் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள், அவர் மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள், அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு, அதைப்போக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இவற்றை எல்லாம் ஆதார்பூர்வமாக எழுதி இருக்கிறார்.

தமிழக அரசியல் பற்றி அறிந்து கொள்ள அரியதோர் புத்தகம்.

 

—-

 

தங்கர்பச்சான் கதைகள், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, விலை 210ரூ.

தமிழகத் திரை உலகின் மிகச்சிறந்த டைரக்டராகவும், ஒளிப்பதிவாளராகவும் விளங்குபவர் தங்கர்பச்சான். தமிழ்ப்படங்களை உலகத்தரத்துக்கு உயர்த்தியதில் இவருக்கு கணிசமான பங்கு உண்டு.

எனினும், திரை உலகில் தன்னுடைய சாதனைகள் குறித்து இவர் கர்வமோ, மகிழ்ச்சியோ கொள்வதில்லை. நான் ஓர் எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்தான் இவர் பெருமை அடைகிறார்.

ஒன்பது ரூபாய் நோட்டு முதலிய நாவல்கள், இவர் சிறந்த இலக்கியவாதி என்று நிரூபித்து இருக்கின்றன. புதிதாக வெளிவந்துள்ள தங்கர்பச்சான் கதைகள் என்ற நூல், அவருடைய இலக்கிய ஆற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

ஒவ்வொரு கதையும் ஒரு சினிமாவுக்கு சமம். ஒருசில கதைகள் உலக சினிமாவுக்கு சமம்.

நன்றி: தினத்தந்தி, 22/1/2014.

சீனத்தின் குரல்

$
0
0

சீனத்தின் குரல், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 25ரூ.

சீன நாட்டு வரலாற்றில் மகான் கம்பூஷியஸ் காலம் முதல் செஞ்சீனத்தலைவன் மா-சே-துங் காலம் வரையில் நடந்த நிகழ்வுகளின் சுருக்கத்தை சீனத்தின் குரல் என்ற தலைப்பில் நூலாசிரியர் சி.பி.சிற்றரசு தொகுத்துள்ளார்.

20 மூல நூல்களிலிருந்து கடந்த 2500 ஆண்டுகளாக சீன நாடு எழுப்பிய குரல்களை, அனைவரும் படித்து தெரிந்து கொள்ளும்வகையில் எளிமையாக தொகுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் நடந்த முக்கியமான பிரச்சினைகளை நுட்பமாகத் தெரிந்து கொள்ள உதவும் புத்தகமாகும்.

 

—-

 

பத்துப்பாட்டு பொருளடைவு, சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். சென்னை 78, விலை ரூ.350.

சிறந்த இலக்கிய ஆய்வாளரான ச.பொ.சீனிவாசன், முனைவர் பட்டத்துக்காக சங்க இலக்கியமான பத்துப்பாட்டை ஆராய்ந்து எழுதிய கட்டுரைகள், பத்துப்பாட்டு பொருளடைவு என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது.

தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர்க்கும், சங்க இலக்கியங்களில் பற்று கொண்டவர்களுக்கும் இந்த நூல் மிகவும் பயன்படும். இதன் விலை ரூ.350.

இதே நூலாசிரியர் பத்துப்பாட்டை இன்னொரு கோணத்தில் ஆராய்ந்து எழுதிய பத்துப்பாட்டில் வருணனை மரபுகள் என்ற நூலையும் இதே பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் விலை 225ரூ.

 

—-

 

தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள், பாவேந்தன் நினைவு அறக்கட்டளை, 41, காவேரி சாலை, கலாசேத்திரா காலனி, பெசன்ட் நகர், சென்னை 90, விலை 50ரூ.

தமிழில் பிழை இல்லாமல் எழுத இலக்கண அறிவை வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். அதிலும் நல்ல தமிழில் எழுத விரும்புவோர் ஒற்றுப்பிழைகளைத் தவிர்த்தல் அவசியம்.

அதற்கு வல்லினம் மிகு இடங்களையும், மிகா இடங்களையும் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு மிக எளிய விதிகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் இந்த நூலில் விளக்கியுள்ளார்.

சிறிய நூலாக இருந்தாலும் சிறந்த நூல்.

நன்றி: தினத்தந்தி, 22/1/2014.

இந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இஸ்லாமிய மன்னர்கள்

$
0
0

இந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இஸ்லாமிய மன்னர்கள், ஜெகாதா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 75ரூ.

இந்திய சிம்மாசனத்தில் கம்பீரமாக ஏறி அமர்ந்து ஆட்சி புரிந்த குத்புத்தீன் ஐபக் முதல் முகலாய அவுரங்கசீப் வரையிலான இஸ்லாமிய மன்னர்களைப் பற்றி எழுதப்பட்ட நூலாகும்.

குறிப்பாக இந்தியா வரலாற்றில் இடம் பெற்றுள்ள அரசியல் சாணக்கியர் முகம்மது பின் துக்ளக், தாஜ்மகால் நாயகன் ஷாஜகான், முகலாய ராஜதந்திரி அக்பர் உள்ளிட்ட 25 இஸ்லாமிய மன்னர்கள் குறித்த செய்திகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மன்னர்கள் குறித்த வரலாற்றை தெரிந்து கொள்வதற்கும், ஆய்வு மேற்கொள்பவர்களுக்கும் பயனுள்ள நூலாக இது அமைந்துள்ளது.

 

—-

 

மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள், டாக்டர் ம. லெனின், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2, போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 185ரூ.

மனித மூளை ஒரு அற்புத இயந்திரம். அதனை முறைப்படி வேலை வாங்க வேண்டியது நம்முடைய கடமையாகும். இந்த அரிய பொறுப்பை திறமையுடன் செய்வதற்கு அனைவருக்கும் வழிகாட்டும்வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.

296 பக்கங்களில் 50 தலைப்புகளில் அரிய புகைப்படங்களுடன் மூளைக்கான எளிதான பயிற்சிகள் விளையாட்டு வடிவில் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

புத்தகத்தை படிப்பதன் மூலம் நம்மிடம் ஒளிந்துகிடக்கும் திறமையையும் வெளிக்கொணர முடியும்.

எதையும் முயற்சியால் சாதிக்க முடியும். அது கடினமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எளிதாகவும் இருக்கலாம். மூளையின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு பயனுள்ள நூல்.

நன்றி: தினத்தந்தி, 22/1/2014.

எங்கே போகிறோம்

$
0
0

எங்கே போகிறோம், அகிலன், தாகம், சென்னை 17, பக். 344, விலை 175ரூ.

கலைமகள் மாத இதழில் தொடராக வெளியாகி பதின்மூன்றாவது பதிப்பு கண்டுள்ள நாவல்.

நாட்டைப் பற்றிய உள்ளக் குமுறலை கதாபாத்திரங்கள் வழியே வெளிப்படுத்தி தனது கருத்துக்களைக் கூற ஒரு கருவியாக இந்த நாவலைப் பய்னபடுத்திக் கொண்டுள்ளார் ஆசிரியர்.

உடலை மூலதனமாக்கிப் பொருள் குவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பெண்ணே இக்கதையின் நாயகி.

காசுக்காகத் தங்கள் மனசாட்சி, சொல், செயல், ஆன்மா என அனைத்தையும் விற்கும் போலிகளைத் தோலுரித்துக் காட்ட நாயகி புவனாவின் பாத்திரம் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது.

பணக்காரர்களின் உலகில் லாபத்தைப் பெருக்கும் கருவியாகப் பெண் பயன்படுத்தப்படும் அவலமும் நாவலில் பட்டவர்த்தனமாக்கப்பட்டுள்ளது. அரசியல் அசிங்கங்களையும் ஆசிரியர் விட்டுவைக்கவில்லை. பணக்காரர்களை உற்பத்தி செய்து, அவர்களிடமிருந்து பணம் வாங்கி அரசியல் நடத்தும் கேவலம் நாடெங்கும் தலை தூக்கிக் கொண்டிருக்கிறது என்று சாடியுள்ளார்.

கயவர்களை வழிகாட்டிகளாகக் கொள்ளும் சமுதாயம் உருப்படுமா? என்று நாவல் வழியே கேள்வியும் எழுப்பியுள்ளார். காந்தியை வழிகாட்டியாகக் கொண்டு சுதந்திரம் பெற்ற நாட்டுக்கு இருபத்தைந்தாண்டு காலத்துக்குள் இந்த நிலை ஏற்படலாமா? என்ற ஆசிரியரின் அன்றைய ஆவேசத்தில் பிறந்ததே இந்த நாவல்.

நாடு சுதந்திரம் அடைந்து இப்போது 67 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் நிலைமை மேலும் மோசமடைந்ததுதான் உண்மை. இந்த நாவலுக்கான தேவை இப்போதும் இருக்கிறது.

நன்றி: தினமணி, 13/1/2014.


இதயம் இதயமாய் இயங்க

$
0
0

இதயம் இதயமாய் இயங்க, வாலண்டினா பப்ளிகேஷன்ஸ், 21-10, லோகநாதன் நகர், 2ம் தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 200ரூ.

இதயம் எப்படி நம் உடம்பில் செயல்படுகிறது என்பதை விரிவாக தெளிவாக விளக்குகிறது இந்த நூல். இதய அமைப்பு, இதய செயல் திறன், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், அறிகுறிகள், காரணங்கள், தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், பராமரிப்பிற்கான வழிவகைகள், கருவுற்ற நிலையில் நச்சுத்தன்மை, மாரடைப்பு என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது? மாரடைப்பிற்கு எளிதில் யார் இலக்காகிறார்கள்? முன்னெச்சரிக்கை அறிகுறிகள், சிகிச்சை முறைகள் என்ன என்பனவற்றுக்கு படங்களுடன் மருத்துவ விளக்கமும், ஆலோசனைக் குறிப்பும் கொடுத்து வாசகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் மருத்துவர் வெ. குழந்தைவேலு.

 

—-

 

பேசும் ஓவியம், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 80ரூ.

சிறுவர்களுக்குக் கதை எழுத தனித்திறமை வேண்டும். இதில் உள்ள கதைகளைப் படிக்கும்போது நூல் ஆசிரியை ஜி.மீனாட்சியின் ஆற்றல் நன்கு புலப்படுகிறது. ஒவ்வொரு கதையிலும் ஒரு நீதி அல்லது பாடம் இருக்கிறது. பேசும் ஓவியம் கதை, எதிர்பாராத திருப்பத்துடன் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. படங்கள், புத்தகத்துக்கு அழகு சேர்க்கின்றன.

 

—-

 

சுராவின் இயர்புக், சுரா காலேஜ் ஆப் காம்படிஷன், 1620, ஜே பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை 40, விலை 299ரூ.

2014ம் ஆண்டுக்கான இயர் புக்கை சுரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பொது பரீட்சைகள் எழுதுவோருக்கு பயன்படக்கூடிய சகல தகவல்களும் அடங்கியுள்ளன. 1232 பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம்.

நன்றி: தினத்தந்தி, 22/1/2014.

காற்றின் குரல்

$
0
0

காற்றின் குரல், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை 92, பக். 264, விலை 250ரூ.

ராமாயண காவியத்தின் நாயகனான ஸ்ரீராமன், ஒரு மாதக் குழந்தையாகத் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்க, அன்னை கௌசல்யை தன் குழந்தையை ரசித்து மகிழ்வதில் தொடங்கி ஸ்ரீ ராமர் சரயூ நதியில் கலந்து விண்ணுலகம் செல்வது வரை உள்ள ராமாயணக் கதையிலுள்ள முக்கிய நிகழ்வுகள் 44 அத்தியாயங்களாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் வால்மீகி ராமாயணத்திலிருந்தும், ஒரு சில சம்பவங்கள் வேறு சில ராமாயணங்களிலிருந்தும் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் ராமரைப் பற்றிய கீர்த்தனைகளிலிருந்தம் நாட்டுப்புறப் பாடல்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ராம காவியத்திலுள்ள பாத்திரங்களின் உரையாடல்கள் எளிமையாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளன. குறிப்பாக, சீதையும் சகோதரிகளும் தங்கள் திருமணம் பற்றிப் பேசுவது, ஸ்ரீ ராமர் வில்லை முறித்த பின் பரசுராமருடன் நடக்கும் விவாதம், ராவணன் ஜடாயுவை வாளால் வெட்டிய பின் தன் மனைவி மண்டோதரியுடன் பேசும் உரையாடல் போன்றவை.

காவியத்தை எளிமைப்படுத்துதல் அரிய செயல். அதனைச் சிறப்பாகச் செய்துள்ளார் நூலாசிரியர்.

ராமனைத் தெய்வமாகக் கொண்டு லட்சிய நாயகனாக்கிய கம்பரிலிருந்து மாறுபட்டு, மனிதப் பண்புகளில் சிறந்தவனாக வடித்திருக்கும் வால்மீகியின் ராமாயணத்தை எளிமையாக அறிந்துகொள்ள உதவும் நூல் இது.

நன்றி: தினமணி, 13/1/2014.

 

—-

 

சமுதாயப் பார்வையில் அவ்வையின் ஆத்திச்சூடி, தமிழ் நிலம் பதிப்பகம், எண்6, ஏ.ஒ.வணிக வளாகம், முனிசிபல் காலனி, மெயின்ரோடு, தங்கம்நகர், தஞ்சாவூர் 7, விலை 100ரூ.

அறம் செய விரும்பு என்று தொடங்கி ஓரம் சொல்லேல் என்று முடியும் அவ்வையாரின் ஆத்திச்சூடி ஓர் அறநூல். இதில் உள்ள 109 ஒருவரி சிந்தனை பாடலுக்கு எழுத்தாளர் தஞ்சை வராகி பொருள் கூறுவதோடு மட்டுமல்லாமல், சமுதாயப் பார்வையில் தனது கருத்துகளை எளிய முறையில் எடுத்துரைக்கிறார்.

இளம் தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள நூல்.

நன்றி: தினத்தந்தி, 22/1/2014.

இடிந்தகரை-சிறைபடாத போராட்டம்

$
0
0

இடிந்தகரை-சிறைபடாத போராட்டம், சுந்தரி, ஐந்திணை வெளியீட்டகம், 4ஏ, 29, முகமதியர் தெரு, மந்தக்கரை, விழுப்புரம் 2, பக். 200, விலை 160ரூ.

இடிந்தகரையில் நடைபெற்று வரும் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக் களத்தில் பங்கேற்று, 98 நாள்கள் திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் நூலாசிரியர் சுந்தரி.

அவர் மீது 12 வழக்குகள். 8ஆம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் சுந்தரிக்கு இப்போது அணுஉலை குறித்து சர்வதேச அளவிலான அறிவும் வளர்ந்திருக்கிறது.

சிறையிலிருந்து பிணையில் விடுக்கப்பட்ட பிறகு, மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த 50 நாள்களில் இந்த நூலை எழுதியிருக்கிறார்.

திருச்சி சிறைச்சாலையில் அவர் சந்தித்த துயரங்களையும், அதனை எதிர்த்து நடத்திய போராட்டங்களையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார். மாதவிடாய் நாளில் நடத்தப்பட்ட நிர்வாண சோதனை என்ற கொடூரம், அதன் பிறகு சுந்தரி நடத்திய போராட்டம், சிறைக்குள் சாம்ராஜ்ஜியம் நடத்திய ரவுடிப் பெண்ணை அடக்கியது.

கழிப்பறையில் கழிவுகள் நிரம்பி வழிந்தபோது அவற்றை வாளியில் எடுத்துச் சென்று வெளியே ஊற்றிய சிறைவாசிகளுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியது இப்படிப் பல நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார் சுந்தரி.

ஏதும் அறியாத எங்களுக்கு இப்போது பேச்சுக் கலை வந்திருக்கிறது. எழுத்துக்கலை வந்திருக்கிறது. ஓவியக் கலை வந்திருக்கிறது என இடிந்தகரை போராட்டம் தந்த அற்புதங்களை ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

தமிழில் பெண் போராளியொருவரின் இப்படிப்பட்ட பதிவு இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை.

நன்றி: தினமணி, 13/1/2014.

 

—-

 

சிங்களன் முதல் சங்கரன் வரை, வானவில் புத்தகாலயம், 10/2, போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 80ரூ.

சிங்களன் முதல் சங்கரன் வரை என்ற நூலின் தலைப்பை பார்த்தால் இந்த இரண்டு தலைப்புகளிலான செய்திகள் மட்டுமே இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் என்று நினைப்பது தவறாகும்.

இலங்கை பிரச்னைகளில் தலைவர்களின் பங்கு குறிப்பாக மறக்கப்பட்டும் கொண்டிருக்கிற தலைவர்களின் பெருமைகளை நினைவுபடுத்துவதில் நூலாசிரியர் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து நூலாசிரியர் சுப. விரபாண்டியன் தமது கருத்தை நடுநிலையுடன் ஆணித்தரமாக எழுதியுள்ளார். சிந்தனைக்கு விருந்தளிக்கும் நூல்.

நன்றி: தினத்தந்தி, 22/1/2014.

தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீடு (சிசிஇ)-ஓர் அறிமுகம்

$
0
0

தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீடு (சிசிஇ)-ஓர் அறிமுகம், பத்மா ஸ்ரீநாத், வேதா டி.ஸ்ரீதரன், வேத ப்ரசகாசனம் வெளியீடு, சென்னை 28, பக். 220, விலை 250ரூ.

மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிக்கும் வழக்கமான பாணியை வேறுவகையில் மாற்றி, அமைத்துள்ளது சி.சி.இ. என்ற தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீட்டுமுறை.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சி.பி.எஸ்.இ. இந்தத் திட்டத்தை தமிழக அரசும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய மதிப்பீட்டு முறையில் தமிழக ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு வினாக்களுக்கு விளக்கமாக விடை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பெற்றோருக்கும் தனது குழந்தை கற்கும் கல்வி முறை சரியானதுதானா? என்பதைப் புரிய வைக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இந்த காலகட்டத்தில், சி.சி.இ.இன் அடிப்படைகளையும் அதன் பலன்களையும் விளக்கி இந்நூல் எழுதப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

சி.சி.இ. என்றால் என்ன? என்பதில் தொடங்கி, அது ஏன் தேவை, அந்தக் கல்வியில் இருந்து மதிப்பீடு வரையிலுமான பல்வேறு விவரங்கள், மாணவரின் மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்பது குறித்து ஆசிரியர்களுக்கான எளிய வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைச் சுவைபட விளக்குகிறார்.

மாணவர்களின் சிறிய வெளிப்பாடுகளையும் கூர்ந்து நோக்குவதன் மூலம் அவர்களின் உள்ளார்ந்த பண்புகளையும், உணர்ச்சிகளையும் எடைபோட முடியும் என்கிறார் நூலாசிரியர்.

நூல் முழுவதிலும் இடம்பெற்றுள்ள ஆங்கில வார்த்தைகள் வாசிப்பதில் தடையை ஏற்படுத்துவதாக உள்ளன. சி.சி.இ. குறித்த அனைத்து விவரங்களையும் வழங்கும் இந்த நூல் குழந்தை மனங்களைக் கையாளுதல் என்ற அவசியமான பணியில் ஈடுபட்டுள்ள தமிழக ஆசிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

நன்றி: தினமணி, 13/1/2014.

 

—-

 

நாட்டைப் பிடித்த நாடோடி, பா. முருகானந்தம், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 85ரூ.

ஆங்கிலேய அரசு, இந்தியாவில் கால் பதிக்க முக்கிய காரணியாக இருந்த ராபர்ட் கிளைவ், ஆரம்ப காலத்தில் ஊதாரியாக, நாடோடியாக திரிந்து, பின்னர் இந்திய நாட்டைப் பிடித்த சுவாரசியமான தகவல்கள் வியக்க வைக்கின்றன. அலங்காரமும் அனுமானமும் இல்லாமல் வரலாறை உள்ளபடி பதிவு செய்து இருப்பது பாராட்டுக்குரியது.

நன்றி: தினத்தந்தி, 22/1/2014.

வெ. இறையன்புவின் வியர்வையின் வெகுமதி

$
0
0

வெ. இறையன்புவின் வியர்வையின் வெகுமதி, குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 176, விலை ரூ.115.

உழைப்பவர்களுக்கே இந்த உலகம் சொந்தம் என்பதுதான் இறையன்புவின் பேச்சும் மூச்சும். அதற்கான உத்தரவாதத்தைத்தான் இந்நூலில் தந்துள்ளார். குமுதம் ரிப்போட்டரில் தொடராக வந்தபோது அதன் தலைப்பே கவனத்திற்குரியதாகி பலரைப் படிக்கத் தூண்டியது.

இன்றைய மனிதனின் ஒவ்வொரு நொடி உழைப்பும் அடுத்த பல தலைமுறையினரின் உயர்வாக அமையும் என்பதை நூல் முழுதும் பதியன் போட்டுள்ளார்.

விலங்கிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டும் வியர்வை, உழைப்பிற்காகச் சிந்தியதாக இருக்க வேண்டும். அந்த வியர்வைதான் அவனது முன்னேற்றம். நாட்டின் முன்னேற்றம்.தன் சந்ததியரின் முன்னேற்றம் என்கிறார்.

வரலாறு, ஆன்மீகம், அறிவியல், கம்யூனிஸம், சோஸலிஸம் அத்தனையும் உழைப்பிற்குள் அடக்கம். படிக்கப் படிக்க நாமும் வியர்வை சிந்த வேண்டும் என்ற உழைப்பின் சூத்திரம் நம் மனதிற்குள் வந்து உட்கார்ந்து கொள்கிறது.

நன்றி: குமுதம், 22/1/2014.

 

—-

 

ஒரு நாதஸ்வரத்தின் பயணம், வி. சந்திரசேகரன், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 70ரூ.

நாதஸ்வர வித்வான்கள் சம்பந்தம் ராஜண்ணா சகோதரர்களின் நினைவுக்குறிப்புகள் அடங்கிய நூல் இது. சங்கித விமர்சனத்தை சாதாரண மக்களுக்கும் புரியும் விதத்தில், அழகுத்தமிழில் சுவாரஸ்யமாக தந்திருக்கிறார்.

கர்நாடக வித்வான்களுடன் இசை சகோதரர்கள் கொண்டிருந்த தொடர்புகளை இணைத்திருப்பதன் மூலம் அந்தந்த வித்வான்களின் சிறப்பியல்புகளையும் அறிய முடிகிறது.

நன்றி: தினத்தந்தி, 22/1/2014.

Viewing all 3876 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>