Quantcast
Channel: Dial for Books
Viewing all 3876 articles
Browse latest View live

தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம்

$
0
0

தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம், மூதறிஞர் தமிழண்ணல், தமிழ்ப் பேராயம், ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் 603203, பக். 80, விலை 45ரூ.

தொல்காப்பியம் தமிழின் தொன்மையான நூல், தமிழின் பண்பட்ட இலக்கணச் செறிவைக் காட்டுவதோடு, தமிழர் வாழ்வியல் பற்றியும் விளக்குவது இது. எழுத்திற்கும், சொல்லிற்கும் எல்லா மொழிகளிலும்இலக்கணம் உண்டு.

அகம்,புறம் என வாழ்வுக்கும் இலக்கணம் வகுக்கும் நூல் தொல்காப்பியம். மூதறிஞர் தமிழண்ணல் புலமையருள் புலமையர் தொல்காப்யித்தை முழுதுணர்ந்து கற்று உரை கண்ட அறிஞர். தொல்காப்பியத்துள் தலைவன் தலைவியர் இலக்கணம் வகுத்துள்ளபாங்கில், இருவர்க்கு இடையிலான பொருத்தங்கள் பேசப்பட்டுள்ளன.

பிறப்பு, ஒழுக்கம், ஆள்வினை, அகவை, அழகு, அன்பு, அடக்கம், அருள், அறிவு, செல்வம் என்னும் பத்தும் தலைவன், தலைவியரிடையே அமைய வேண்டிய ஒப்புமைகள். இவற்றுள் அகவை என்னும் வயது இருவருக்கும் சமமாய் இருத்தல் எனப் பொருள் கொள்ளலாகாது.

பன்னிரண்டு, பதினாறு (பெண், ஆண்) என்னும் தன்மையே ஆகும். பொருத்தங்கள் பற்றி மட்டும் பேசாது, தமிழர் காதல் வாழ்வின் மேன்மை பற்றியும், தமிழர் திருமண முறை பற்றியும் தெளிவாக, நுட்பமாக ஆராய்கிறது இந்நூல். தமிழுணர்வாளர் யாவரும் படித்தறிந்து மகிழத்தக்க நல்ல நூல் இது.

-கவிக்கோ ஞானச் செல்வன்.

நன்றி: தினமலர், 1/12/13.

 

—-

 

இந்திய ஆங்கில இலக்கிய வரலாறு, எம்.கே. நாயக், தமிழாக்கம்-வெ.அயோத்தி, கு.குணசேகரன், சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 260ரூ.

இந்தியாவில் பிறந்தவர்கள், ஆங்கில மொழியில் எழுதிய கவிதை, கதை, வாழ்க்கை வரலாறு போன்ற இலக்கியங்களின் தொடக்கம் முதல் தற்போது வரையிலான வரலாற்றை விளக்குகிறது இந்த நூல். இந்திய ஆங்கில இலக்கியத்தில் மகாத்மா காந்தி, நேரு, அரவிந்தர், சரோஜினி நாயுடு, பக்கிம் சந்திர சட்டர்ஜி உள்பட பலரின் பங்களிப்பை இதில் காணமுடிகிறது.

18ம் நூற்றாண்டின் இறுதி முதல் தற்போது வரை உருவான இந்திய ஆங்கில இலக்கியங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன என்பது விரிவாக அலசப்பட்டுள்ளது. மாணவர்களுக்கும் இந்திய ஆங்கில இலக்கிய வரலாறு பற்றி ஆய்வு நடத்துபவர்களுக்கும் இந்த நூல் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி: தினத்தந்தி, 4/12/13.


நினைவு நாடாக்கள்

$
0
0

நினைவு நாடாக்கள், கவிஞர் வாலி, விகடன் பதிப்பகம்.

கவியரசர் கண்ணதாசனுக்கு ஒப்பாக வைத்து பாராட்டப்படுபவர் இந்நூலாசிரியர். இவர் கவிதை, கட்டுரை, பேச்சு, நடிப்பு, பாட்டு, ஓவியம் என்று பன்முகத் தன்மை கொண்டவர்.

இவர் திரைத் துறையில் நுழைந்தது முதல் அதில் கோலோச்சியது வரை அத்துறையில் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களையும் நினைவுகூறும்போது, நம்மையும் அந்தச் சூழலுக்கு கூட்டிச் செல்கிறார்.

தவிர இவரது எழுதிதும், நடையும் செறிவூட்டப்பட்ட புதிய தமிழை நமக்குக் கற்றுத் தருகிறது. இந்நூலில் உள்ள 50 கட்டுரைகளும், முன்பு ஆனந்த விகடனில் வெளியாகி வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

இதில் வரும் சினிமா, இலக்கியம், ஆன்மிகம், நட்பு என்று பல விஷயங்களையும் எப்படி இவரால் இவ்வளவு பசுமையாக நினைவுகூற முடிகிறது என்று வியக்கத் தோன்றுகிறது.

ஒவ்வொரு கட்டத்திலும் தன் வளர்ச்சிக்கு உதவியவர்களை உள்ளபடி நன்றி பாராட்டுவது அவரை மேலும் உயர்த்துகிறது. பிறையும் வில்லும் என்ற 30வது கட்டுரையில், வைதீக பிராமண குலத்தில் பிறந்த தனக்கு தாய்ப்பால் கொடுத்து வளர்த்தது முதல் தனது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் இருந்த சில இஸ்லாமிய நண்பர்களின் பங்கை நன்றி பெருக்குடன் கூறுவது அவரது சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகிறது.

இப்படி வி.கோபாலகிருஷ்ணன், நாகேஷ், எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி, ரஜினி, கமல், எம்.எஸ்.வி., டி.எம்.எஸ்., இளையராஜா என்று சினிமாவின் அனைத்துத் துறையினரைப் பற்றிய இவரது அனுபவங்கள் படிக்கச் சுவையானவை.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 17/11/13.

 

—-

 

மலரும் உள்ளம், பாரி புத்தகப்பண்ணை, 88/84, பிராட்வே, சென்னை 108, விலை 75ரூ.

குழந்தைகளுக்குப் பாடல்கள் எழுதுவதில் தலைசிறந்து விளங்கியவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. அவர் எழுதிய பாடல்களைக் கொண்ட மலரும் உள்ளம் புத்தகத்தின் முதல் தொகுதி. ஏற்கனவே வெளிவந்துவிட்டது.

இரண்டாம் தொகுதி இப்போது வெளிவந்துள்ளது. சிறந்த பாடல்கள் இடம் பெற்றுள்ள புத்தகம்.

நன்றி: தினத்தந்தி, 4/12/13.

புலம் பெயர்ந்த தமிழர்கள் –மலேசியா

$
0
0

புலம் பெயர்ந்த தமிழர்கள் – மலேசியா, மைக்கேல் ஸ்டென்சன், தமிழில்-எஸ். கண்ணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 270ரூ.

புலம்பெயர்ந்து செல்வது தமிழனுக்குப் புதிதல்ல. 18ம் நூற்றாண்டில் நீக்ரோ அடிமைகள் கப்பலில் ஏற்றப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதைப் போல இலங்கை, மலேசியா போன்ற நாடுகளின் தோட்டங்களில் வேலை பார்க்க தமிழர்கள் கொண்டுசெல்லப்பட்டார்.

எங்கேயாவது போய் பிழைத்துக்கொள் என்று இங்குள்ள பஞ்சமும் பட்டினிச் சாவு, சாதிக் கொடுமையும் அவர்களை விரட்டியது. ஒப்பந்தக் கூலிகள் என்று ஏதோ அதிகாரப்பூர்வமானவர்களாக இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டாலும், கொத்தடிமைகளை விடக் கேவலமாகவே நடத்தப்பட்டார்கள்.

இப்படி மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும், அதிலிருந்து உரிமைபெற கொந்தளிப்புடன் நடத்திய போராட்டங்களும் பற்றிய வரலாறுதான் இந்தப் புத்தகம்.

மார்க்சிய அடிப்படைக் கொள்கை மொழிபெயர்ப்புகளைச் செய்த வேட்டை எஸ். கண்ணனின் செறிவான மொழிபெயர்ப்பில் இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது. தென் இந்தியாவில் இருந்த பிரிட்டன் ஆட்சி, அங்கு வாழ்ந்த மக்கள் அனுபவித்த கொடிய வறுமை, அடிமை வாழ்வு ஆகிய மூன்றும்தான் இவர்களைப் புலம்பெயர்ந்து வாழ விரட்டியது.

இதேபோல் சீனா, இந்தோனேசியா ஆகிய நாட்டு தொழிலாளிகளும் மலேசியாவில் குவிக்கப்பட்டனர். பல்வேறு இனங்கள் ஒரு இடத்தில் குவியும்போது ஏற்படும் கொந்தளிப்பை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்தியா, சீனா, இந்தோனேசியா ஆகிய தனித்தனியா மூன்று ஆசிய தேசிய இனவாதங்களின் செல்வாக்கு அங்கு ஏற்பட்டன.

எந்த ரப்பர் தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காக இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்களோ அந்தத் தொழிலில் தேக்கம் ஏற்படும்போது தொழிலாளர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தக் கோரிக்கையை சீனர்களும் இந்தியர்களும் ஏற்க மறுத்தார்கள்.

அதுவரை அமைதியான நாடாக இருந்த மலேசியா கொந்தளிப்பைச் சந்தித்தாக வேண்டிய நெருக்கடி… இத்தகைய சூழ்நிலையில்தான் மலேசிய இந்திய மத்தியக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. இந்தியத் தொழிலாளர்களின் தகுதியை உயர்த்துவதே ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் தகுதியை உயர்த்துவதற்கான திறவுகோல் என்று மலேசிய அரசாங்கத்துடன் இந்த அமைப்பு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.

இந்தியத் தொழிலாளர்கள் ஒன்று திரட்டப்படுவது, இது தேசியவாதமாகவும் வகுப்புவாதமாகவும் செயல்படுவது, உள்நாட்டு அரசியல் கொந்தளிப்புகளை இந்தச் சமூகம் எப்படி எதிர்கொண்டது. அதன்பிறகு வர்க்க அடிப்படையில் எப்படி அணிதிரண்டது.

மலேசியா இந்திய காங்கிரஸ், உள்நாட்டு கலவரங்கள், ஆட்சிகள் என நீண்ட வரலாற்றை (1930-1969) வரிசையாக அடுக்குகிறது இந்தப் புத்தகம். இன்றும் நிலைமை மாறவில்லை. பழைய வரலாற்றை உணர்வதன் மூலமாக எதிர்கால லட்சியத்தை அடைய முடியும் என்ற உன்னதமான நோக்கத்தை இந்தப் புத்தகம் தூண்டுகிறது

-புத்தகன்.

நன்றி: ஜுனியர் விகடன், 20/11/13.

பகை தகர்க்கும் தமிழ்த் தேசியம்

$
0
0

பகை தகர்க்கும் தமிழ்த் தேசியம், வீர சந்தானம், பொன்னி வெளியீடு, 21/1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை 91, விலை 40ரூ.

தூரிகைப் போராளி வீர. சந்தானம் எழுதிய புத்தகம் இது.

ஒரு காலத்தில் இந்திய தேசியத்துக்கும் திராவிட தேசியத்துக்கும் தீராத கருத்து மோதல் இருந்து வந்தது. இப்போது திராவிட தேசியத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்குமான மோதலாக அது மாறி இருக்கிறது.

இதில் தமிழ்த் தேசியத்தின் பக்கமாக ஓவியர் வீர.சந்தானம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். தமிழ்த் தேசியம் பேசுவதாலேய திராவிட இயக்கத்தின் சாதனைகளை, திராவிடத் தலைவர்களைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற வறட்டுப் பிடிவாதம் இல்லாமல் அந்த இயக்கத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை என்ன?

அவர்களின் கடந்த காலத் தவறுகளில் இருந்து படித்தாக வேண்டிய பாடங்கள் என்ன என்பதை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் வீர. சந்தானம் அடுக்குகிறார். இந்தப் புத்தகத்தின் வெற்றியே அவரின் எளிமையான மொழி நடைதான். பொதுவாக கொள்கை, தத்துவம் சார்ந்த விவாதப் புத்தகங்கள், அதைத் தெளிவுபடுத்துவதாக நினைத்து அதிகமான குழப்பங்களையே ஏற்படுத்தும்.

மண்மொழி இதழில் சாமானியர்களுக்கான தமிழ்த் தேசியம் என்ற தலைப்பில் அவர் கேள்வி பதில் வடிவில் எழுதியவை இவை என்பதால் உண்மையில் சாமானியர்களுக்காக எழுதப்பட்டதாகவே இருக்கிறது.

இந்தியா என்பது பல்வேறு தேசிய இனத்தவர் வாழுகிற ஒரு நாடு. மொழியால், இனத்தால் பிரிவுபட்டு பக்கத்துப் பக்கத்து நிலப்பரப்பில் வாழ்ந்துகொண்டு இந்தப் பகுதி மக்களை தன்னுடைய நிர்வாக வசதிக்காக இந்தியா என்ற நாடாக உருவாக்கியது பிரிட்டிஷ் நிர்வாகம்.

ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளுக்கும் இலக்கணம் இருப்பதுபோல் தேசத்துக்கும் இலக்கணம் உள்ளது. பொதுமொழி, பொது தாயகம், பொதுவான பொருளார வாழ்க்கை, பொதுவான உளவியல் உருவாக்கம் இவை அனைத்தையும் கொண்டதுதான் தேசம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இது இந்தியாவுக்குப் பொருந்தி வரவில்லை என்று தொடங்கும் வீர.சந்தானம் திராவிடம் என்பதையும் தேசியமாக ஏற்கவில்லை. ஆனால் திராவிடம் என்ற சொல் என்ன நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதை மிகச் சரியாகவே வீர. சந்தானம் அடையாளப்படுத்துகிறார்.

ஆயிரம் ஆண்டுகள் கல்வி மறுத்த, மனிதனை மனிதனாக ஏற்று மறுத்த ஆரியர்களிடம் இருந்து நம்மைத் தனியாக அடையாளப்படுத்த அநத் ஆரியத்தை எதிர்க்க அதற்கு மாற்றாக தந்தை பெரியார் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தினாரே தவிர அவர் சிந்தனை முழுவதும், தமிழர், தமிழர் நலன் சார்ந்தே இருந்தது.

அவர் திராவிட நாடு என்றாலும் சென்னை மாகாணம் என்றாலும் அதன் சாரம் தமிழ்நாடே தமிழ்த் தேசமே என்று சொல்வது கவினக்கத்தக்கது. திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதாலேயே தீண்டத்தகாதவர்களாக அவர்களை நினைப்பவர்களுக்கு இது புரிய வேண்டும்.

ஒரு இனம் தம் மொழி, வாழ்விடம், வாழ்வு, பண்பாடு பறிபோகிறபோது அதை மீட்டெடுக்கப் போராட்டம் நடத்துவது தவிர்க்க முடியாதது. அந்தப் போராட்டம் எத்தகைய புரிதலுடன் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான பாடப் புத்தகமாக இருக்கிறது இந்தப் புத்தகம்.

-புத்தகன்.

நன்றி: ஜுனியர் விகடன், 24/11/13.

கழியல் ஆட்டம்

$
0
0

கழியல் ஆட்டம், முனைவர். வே. கட்டளை கைலாசம், காவ்யா.

நாட்டுப்புற நிகழ்த்துதல் கலைகளில் ஒன்றான ஆண்களின் ஆட்டக் கலையை பற்றியதே கழியல் ஆட்டம் என்ற இந்த நூல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஆண்கள் ஆடும் கோலாட்டம் தான் கழியல் ஆட்டம்.

இன்றைய சூழலில் பல்வேறு பொழுதுபோக்குகள் மக்களை ஆக்கிரமித்தாலும் நாட்டுப்புற கலைகளில் கிடைக்கும் இயற்கையான உற்சாகம் ஈடில்லாதது. இந்த ஆட்டத்தில் ஒத்த உடற்கட்டுள்ள எட்டு பேர் பங்கு கொண்டு ஆடுவர். கும்மிக்கழியல் என்ற ஆட்ட முறையில் மட்டும் எட்டு பேருக்கு மேல் கலந்து கொள்வர்.

ஆட்டக்காரர்கள் வட்டமாக சுற்றி நின்று தன்னாளிடமும், தனக்கு எதிர் வரும் ஆளிடமும் கோல் அடித்து ஆடுவர். தென் மாவட்டங்களில் இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர்கள் சமய விழா மற்றும் குடும்ப விழாக்களில் இந்த ஆட்டத்தை நிகழ்த்துவர்.

ஆட்டத்திற்கு தகுந்த பாடல்கள் ஆட்ட ஆசான் அண்ணாவியால் பாடப்படும். கழியல் ஆட்டத்தின் விதிமுறைகள் புள்ளி விவரங்களுடன் 205 பக்கங்களுடன் முதல் பதிப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது. இதை செங்குன்றம் முழு நேர நூலகத்தில் படிக்கலாம்.

நன்றி: தினமலர், 28/7/13

 

—-

 

சல்லிக்கட்டு வீரம், எழில்வேந்தன், எழில்வேந்தன் பதிப்பகம், 71/1-8வது தெரு, கிருஷ்ணராஜபுரம், தூத்துக்குடி 2, விலை ரூ. 350.

ஜல்லிக்கட்டின் முதல்படி ஏறுதழுவுதல் என்பதில் தொடங்கி, தற்போது நடந்து வரும் ஜல்லிக்கட்டு வரை அனைத்து போட்டிகளையும் நம் முன் படம் பிடித்து காட்டியுள்ளார் நூல் ஆசிரியர்.

ஜல்லிக்க்ட்டுக்கு முன்பாக காளைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளையும், அவற்றிற்கு வழங்கப்படும் உணவுகைளயும் பட்டியலிட்டதுடன், ஜல்லக் காளைகளின் வளர்ப்பு முறை, வீரர்களின் பிடிமுறை பற்றியும் விவரிக்கப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு எதிரொக தொடரப்பட்ட வழக்குகள், அதற்காக நீதிமன்ற தீர்ப்புகளும் புத்தகத்தில் இடம்பெற்று உள்ளன.

நன்றி: தினத்தந்தி, 4/12/13.

பாரதி ஒரு திருப்புமுனை

$
0
0

பாரதி ஒரு திருப்புமுனை, அ. அறிவுநம்பி, சித்திரம் வெளியீடு, 15, கலைவாணி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி 605008, பக். 132, விலை 75ரூ.

மகாகவி பாரதியின் கலைச் சிந்தனைகளை ஆய்வு செய்யும் நூல். பாரதி ஒரு திருப்புமுனை, பாரதியின் கலைச் சிந்தனைகள், புனை கதை உத்திகள், பாரதியும் பிற நாட்டவரும் என்பன உள்ளிட்ட 10 தலைப்புகளில் புதுமையான ஆய்வுக் கட்டுரைகளை வடித்துள்ளார் நூலாசிரியர்.

உலகம் முழுமைக்கும் கவிதை பாடிய பாரதியை ஆங்கிலக் கவிஞர்கள் ஷெல்லியுடனும் கீட்ஸுடனும் ஒப்பாய்வு செய்திருப்பது சிறப்பு. தீக்குள் விரலை வைத்தால்… நந்தலாலா… உன்னைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா என்ற வரிகள், நிறையபின் வெளிப்பாடே என்ற ஆசிரியரின் ஆய்வு ரசிக்கும்படியிருக்கிறது.

பாரதிக்கு இசைக் கலையின் மீதிருந்த புலமையும், ஆர்வமும் பாரதியின் கலைச் சிந்தனைகள் என்ற தலைப்பிலான கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. காவியம், தனிப்பாடல், சுயசரிதை, வசன கவிதை, கதை, நெடுங்கதை, நாடகம், அங்கதக் கட்டுரை போன்றவற்றைப் படைத்த பாரதி, கும்மிப்பாட்டு, நலுங்குப்பாட்டு, அம்மானைப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு போன்ற நாட்டுப்புறப் பாடல்கலைகளிலும், ஹிந்துஸ்தானி, மேற்கத்திய இசை போன்றவற்றிலும் கூட ஞானம் பெற்றவர் என்பதை ஆதாரங்களுடன் விளக்குகிறார் நூலாசிரியர்.

பராசக்தி, மாகாளி, முருகன், கண்ணன் என ஹிந்து தெய்வங்களைப் பாடிய பாரதி, ஏசு கிறிஸ்து, அல்லாவையும் சேர்த்து பாடிவிட்டு இறுதியில் அறிவே தெய்வம் என்று பாடுவது முரணாக உள்ளதே என்று கேட்பவர்களுக்காக எழுதப்பட்டள்ள பாரதியார் குழப்பவாதியா என்ற தலைப்பிலான இறுதிக் கட்டுரைக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.

நன்றி: தினமணி, 18/11/13.

 

—-

 

சோம்பலை உடைத்தெறிந்தால் சொர்க்கம்தான், கே. சொக்கலிங்கம், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 45ரூ.

55 கவிதைகள் அடங்கிய நூல்.

நன்றி: தினத்தந்தி, 4/12/13.

 

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

$
0
0

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி, முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தியாகராய நகர், சென்னை 17, பக். 176, விலை 55ரூ.

தமிழர்களின் கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசைக்கலை, நடனக் கலை, நாடகக் கலை, இலக்கியக் கலை ஆகியவற்றைப் பற்றி தெளிவாகவும் ஓரளவு விரிவாகவும் எழுதப்பட்டுள்ள நூல். அழகுக் கலை என்பது ஒப்பனை மட்டுமல்ல என்பதை விளக்கும்விதமாக அழகுக் கலைகள் யாவை? என்ற தலைப்பில் ஒரு சிறப்பான கட்டுரையை எழுதியுள்ளார் நூலாசிரியர்.

கட்டடக் கலை பகுதியில் மரக்கோயில், செங்கல் கட்டடம், குகைக்கோயில், கற்றளி போன்றவற்றைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருப்பதோடு இந்திய நாட்டுக் கட்டடக்கலையின் பிரிவுகள் பற்றியும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதுபோன்ற பிற கலைகளைப் பற்றியும் எளிமையாக விளக்கியுள்ளார் நூலாசிரியர்.

ஒவ்வொரு பிரிவிலும் அடங்கியுள்ள பல புதிய தகவல்கள் நூலாசிரியரின் ஆராய்ச்சி நோக்கத்தையும் ஆழ்ந்த புலமையையும் காட்டுகின்றன. உதாரணமாக, சமணர்கள் இசைக் கலையை அழித்துவிட்டதாகக் கூறுவது தவறு. அவர்கள் இசைக் கலையைப் போற்றி வளர்த்தவர்கள். இசைக் கருவியான நாகசுரத்துக்கு அப்பெயர் வரக் காரணம் அதனைக் கண்டுபிடித்தவர்கள் நாகூர், நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள், யாழ் வாசிப்பதில் வல்லவனான பாணன், ஒருவனுக்கு ஓர் அரசனால் பரிசாகக் கொடுக்கப்பட்ட ஊர்தான் இலங்கயில் உள்ள யாழ்ப்பாணம். இப்படிப் பற்பல.

தமிழில் வெளிவந்துள்ள இதை தொடர்புடைய நூல்கள் பற்றிய குறிப்புகளும், ராகங்கள் பற்றிய விளக்கங்களும் பலருக்கும் பயன்படக் கூடியவை. சிறிய நூலாயினும் செறிவான கருத்துகள் அடங்கிய நூல்.

நன்றி: தினமணி, 18/11/13.

 

—-

 

எல்லா உயிரும் தொழும், சாந்தி பதிப்பகம், 5, சி.பி. சாலை, இரண்டாவது சந்து, சென்னை 21, விலை 40ரூ.

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சிறப்பாக எழுதியுள்ளார் ஆசீர். பா அன்பு கணபதி, இயேசு மீது அவர் கொண்டுள்ள பக்தியை, அவர் எழுத்துக்கள் பிரதிபலிக்கின்றன. மனதைத் தொடும் நூல்.

நன்றி: தினத்தந்தி, 4/12/13.

வைரமணிக் கதைகள்

$
0
0

வைரமணிக் கதைகள், வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை 20, பக். 418, விலை ரூ.450

பல்வேறு இதழ்களில் வெளிவந்த நூலாசிரியரின் 80 சிறுகதைகளின் தொகுப்பு.

பெரும்பாலான கதைகளின் களங்கள் கிராமத்து மண்ணின் மீதே என்றாலும் நகர்ப்புறங்களின் அனுபவச் சாயல்களும் சில கதைகளில் உண்டு. அகல், அவள் மற்றம் அம்மா சிறுகதையில் வரும் காங்சனாவின் பண்பு யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டது.

வழிகாட்டும் ஒளியாகக் காஞ்சனா இருப்பதையும் தனது மனமே தவறாகச் சஞ்சலப்பட்டதையும் அழகிரி உணர்வதாகக் காட்டியிருக்கும் பாங்கு எழுத்தாளரின் எழுத்தாளுமையைக் காட்டுகிறது.

ஆட்டோ சிறுகதை நகர்ப்புற, நடுத்தரப் பெண்களின் பிரச்சினையைப் பெண்ணியப் பார்வையில் எடுத்துரைக்கிறது. நிஜமாகவே நடக்கும் சம்பவம் நுகத்தடி கதையில் கலங்க வைக்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பால் மறதி கதையில் மடி சுரக்காது அவதிபப்டும் பசு மாடு சிகிச்சை பலனின்றி இறந்துவிடுகிறது. ஒரு மகத்தான விடுதலையை அனுபவிப்பது போன்று மாட்டின் கண்களில் ஒரு நிம்மதி தென்பட்டது என்று கதையை முடித்து மாட்டுக்குச் சொந்தக்காரனை மட்டுமல்லாது, நம்மையும் விம்ம வைத்துவிடுகிறார் கதாசிரியர்.

கொடியேற்றம் ஒரு தொடக்கம் ஒரு முடிவு, இசை நாற்காலி ஆகிய வித்தியாசமான கதைகளும் வாசகர்களைக் கவரும். அன்றாடம் வாழ்வில் எதிர்படும் நபர்கள் பல சிறுகதைகளில் கதாபாத்திரங்களாக அமைந்திருப்பது சுவாரசியமான வாசிப்புக்கு வழி வகுக்கிறது.

நன்றி: தினமணி, 18/11/13.

 

—-

 

எழுத்தாளர் பதிப்பாளர் விற்பனையாளர், மெர்வின், 350, 37வது தெரு, டி.வி.எஸ்.அவென்யூ, அண்ணாநகர் மேற்கு, சென்னை 101, விலை 80ரூ.

புத்தகங்கள் வெளியிடுவதில் முக்கிய பங்காற்றும் இந்த மூன்று தரப்பினர் இடையேயும் பல்வேறு பிரச்சினைகள் உண்டு. குறிப்பாக, எழுத்தாளர்களுக்குத் தரவேண்டிய சன்மானத்தை (ராயல்டி) பதிப்பாளர்கள் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உண்டு.

இதுபற்றியெல்லாம் அலசி, ஆராய்ந்து, பதிப்புத்துறையில் உள்ள பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் கூறுகிறார் அனுபவம் மிக்க எழுத்தாளர் மெர்வின்.

நன்றி: தினத்தந்தி, 4/12/13.


வண்டாடப் பூ மலர

$
0
0

வண்டாடப் பூ மலர, ம.பெ. சீனிவாசன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 208, விலை 125ரூ.

வண்டாடப் பூ மலர என்ற நூலின் தலைப்பே மிகவும் இலக்கிய நயமாகவும், உச்சரிக்கும்போது இனிமையாகவும் இருப்பதை உணர முடிகிறது. அதைப்போலவே நூலில் இடம் பெற்ற ஒவ்வொரு கட்டுரையும் இலக்கிய ஆய்வு நோக்கில் எழுதப்பட்டிருப்பது, மிகச் சிறப்பானதாக உள்ளது.

சாமானியர்களின் வாய்மொழிப்பாடல்கள் எப்படி சங்க இலக்கியவாதிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை முதல் கட்டுரையின் மூலம் ஆசிரியர் மிக நுணுக்கமாக, ஆதாரங்களோடு விளக்கியிருப்பது, அவரது நுட்பமான அறிவை வெளிப்படுத்துகிறது.

நூலின் இரண்டாவது கட்டுரையான ஐம்பாலில், அதன் பெயர்க் காரணத்தை அழகாக ஆய்ந்துள்ளார். முடியைப் பற்றியதாலோ என்னவோ, ஆசிரியருக்கும் முடிவில்லாமல் இந்த ஆய்வைத் தொடர வேண்டும் என்று கூறியிருக்கிறார். நம் வாழ்வில் சாதாரணமாகக் கூறப்படும் பல சிறப்புத் தொடர்களை யார் கூறியது என்றே தெரியாமலே பயன்படுத்தி வருகிறோம்.

அந்தவகையில் நிலம்+நீர் = உணவு எனும் கட்டுரையானது உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தோர் எனும் சொல்லின் பெருமையை விளக்குவதாக உள்ளது. தமிழின் ஆதிகவிகளில் ஒருவரான புறநானூற்றுப் புலவர் குட புலவியனார் கூறிய அந்தச் சொற்றொடர் எப்படி மணிமேகலை காலம் தொட்டு, இன்று வரை வழக்கத்தில் உள்ளது என்பதை மிக நேர்த்தியாகக் கூறியிருப்பது படிப்போரை சிந்திக்க வைக்கிறது.

நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கும்போது புதிய புதிய விஷயங்களை அறியும் வாய்ப்பும், ஆய்வு நோக்கில் ஆசிரியர் பாடல்களை விளக்கும்போது வியப்பும் ஏற்படுகிறது. ஆகவே, படித்தவர் முதல் பாமரர் வரையில் நமது தமிழர்தம் வாழ்வை அறிந்து எதிர்காலத்தில் நமது பண்பாட்டைப் பாதுகாக்க இதுபோன்ற நூல்கள் ஏராளமாக வருவது அவசியம்.

அந்தவகையில் இந்த நூல் தமிழ் அறிந்த அனைவரது கையிலும் தவழ வேண்டிய நூல் என்பதில் சந்தேகமேயில்லை.

நன்றி: தினமணி, 18/11/13.

வள்ளியூர் வரலாறு

$
0
0

வள்ளியூர் வரலாறு, சு. சண்முகசுந்தரம், காவ்யா, சென்னை 24, பக். 503, விலை 400ரூ.

தென் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில் திருத்தலங்களில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரும் ஒன்று. இது வளர்ந்து வரும் நகரமும்கூட.

இந்த ஊர் தொடர்பான இலக்கியங்கள், செவிவழிச் செய்திகள், நாட்டுப்புறப் பாடல்கள், புராணங்கள், வரலாறுகள், கல்வெட்டுகள், வாய்மொழி வழக்குகளில் உள்ள பல்வேறு செய்திகளின் விரிவான தொகுப்பே இந்நூல்.

நூலாசிரியரின் கடின உழைப்பும் சுவைபடச் சொல்லும் விதமும் ஓர் ஊரின் பின்னணியில் இத்தனை சம்பவங்களும் செய்திகளும் வரலாறும் உள்ளனவா என்பது வாசிப்போரை வியக்க வைக்கின்றன. நூலில் பின்னிணைப்பாக ஐவர் ராசாக்கள் கதை, கன்னடியன் போர், வீணாதிவீணன் கதை, ஆந்திரமுடையார் கதை ஆகியவற்றின் கதைப் பாடல்கள் வடிவங்கள் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

அவை வள்ளியூர் தொடர்பான மேலும் ஆய்வு செய்ய முயல்வோருக்குப் பேருதவியாக இருக்கும்.

நன்றி: தினமணி, 18/11/13.

 

—-

 

ஸ்ரீ ராமானுஜர் அருளிய வேதப்பொருள் சுருக்கம், சடகோப முத்துசீனிவாசன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 24, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ.

மத்திய காலத்தில் வாழ்ந்த ராமானுஜர், வேத வழியில் வைணவ சமயத்தி செப்பனிட்டார். அவர் அருளிய வேதப் பொருள் சுருக்கம் எனப் பொரள்படும் வேதாந்த சங்கிரஹம் என்னும் இந்நூலுக்கு தமிழில் சில உரைகள் காணப்படுகின்றன. எனினும் அவையாவும் வடமொழிச் சொற்களாகவே இருக்கின்றன.

ஆகையால் தற்காலத்தில் வழங்கும் தமிழில்இந்நூலை தொகுத்து வழங்கி இருக்கிறார் ஆசிரியர். மேலும் வடமொழிச் சொல்லுக்கு உரிய தமிழ் பொருட்களை சுட்டிக் காட்டி இருப்பது சிறப்பு.

நன்றி: தினத்தந்தி, 4/12/13.

பாவலர் வரதராஜன் பாடல்கள்

$
0
0

பாவலர் வரதராஜன் பாடல்கள், கவிதா பதிப்பகம், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 125ரூ.

உரத்தகுரலில் உணர்ச்சி ததும்ப ஊர் ஊராய் மேடைதோறும் போய்ப் பாடிபாட்டுப் புரட்சி நடத்தியவர் பாவலர் என்று அழைக்கப்பட்ட வரதராஜன். இந்தப் பாவலரின் பாட்டு 1958ம் ஆண்டுவாக்கில் கேரளாவின் ஆட்சியை மாற்றிக் காட்டியது.

அதுவரை எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனி1ட் கட்சியை கேரளத்தில் ஆட்சிக் கட்டிலில் ஏற்றி அழகு பார்த்தது. இதற்கான வெற்றி விழாவில் கலந்து கொள்ள வந்த கேரள முதல்மந்திரி ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு இவடெ பாவலர் வரதராஜன் யாரானு? என்று கேட்டு, அவரை மேடைக்கழைத்து தனக்கு அணிவிக்க இருந்த ஆளுயர மாலையை அவருக்கு அணிவித்து அழகு பார்த்தது அன்றைய வரலாற்று அழகு.

பாவலரின் பாடல்கள் கேட்கும் அந்த வினாடியிலேயே கேட்பவர்களின் உணர்ச்சியை தட்டிப் பார்ப்பவை என்பதை அவரது பாடலின் வரிகள் நிரூபிக்கின்றன. வரிக்கு வரி வாள்வீச்சான வார்த்தைப் பிரயோகங்கள் நூல் முழுக்க இறைந்து கிடக்கின்றன.

பாவலர் வரதராஜன் இசைஞானி இளையராஜாவின் பெரியண்ணன் என்பதும், அண்ணனின் கச்சேரியில் தனது சிறுவயதில் இளையராஜாவும் பாடியிருக்கிறார் என்பதும் இந்தப்பாட்டோடு இணைந்த சுக ராகம்.

 

—-

 

வாழும் கலை – மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள், பி.எஸ்.ஆர். ராவ், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 300ரூ.

தத்துவ மேதை ஜே.கே. என்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஜே. கிருஷ்ணமூர்த்தி மற்ற அனைவரிலும் இருந்து வித்தியாசமானவர். எந்த சமயத்தையும் மதத்தையும் ஏற்காதவர்.

அனைத்து கட்டுப்பாடுகளிலும் இருந்து ஒருவன் தின்னை விடுவித்து சுதந்திரமாக செயல்பட்டு உண்மையை அறிவதுதான் வாழ்க்கையை மேம்படுத்தும் என்ற அவரது கோட்பாட்டை வலியுறுத்தும் அவரது சொற்பொழிவுகள், புரிந்து கொள்ள சற்று கடினமாக இருக்கும்.

அவற்றை சாதாரணமானவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் அந்த கருத்துக்கள் மிக எளிமையாக இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. நேரடி மொழியாக்கமாக இல்லாமல் எழுதி இருப்பதால், இடர்பாடின்றி தெளிந்த நீரோட்டம் போல சரளமாக படிக்க முடிகிறது. ஜே.கே.யின் தத்துவங்களை எளிதாக புரிந்து கொள்ள உதவும் நூல்.

நன்றி: தினத்தந்தி, 4/12/13.

பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள்

$
0
0

பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள், தமிழில்-சா.தேவதாஸ், கருத்து பட்டறை, 2, முதல் தளம், மிதேஷ் வளாகம், 4வது நிறுத்தம், திருநகர், மதுரை 6, விலை 380ரூ.

யதார்த்தமில்லாத கவிஞன் இறந்தவன் ஆவான். யதார்த்தம் மட்டுமேயுள்ள கவிஞனும் இறந்தவன் ஆவான். அறிவுக்கப் புரியாத வகையில் எழுதும் கவிஞர்களின் கவிதைகள் அவர்களுக்கு மட்டுமே புரியும். இது மிகவும் வருந்தத்தக்கது என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் பாப்லோ நெரூடா.

உலகப் பொதுவுடைமை இயக்கத்தின் உன்னதக் கவிஞன் என்று பாராட்டுப் பெற்ற காலகட்டத்திலேயே, பகைவனுடனும் ஒத்துழைக்க விரும்பும் அமெரிக்க ஆதரவு திரிபுவாதி என்று கம்யூனிஸ்ட்களால் கொச்சைப்படுத்தப்பட்ட கவிஞர் நெரூடா. துதரகங்களில் வேலை பார்த்ததால் உலக அரசியலைத் துல்லியமாக அறிந்து, மார்க்சியமே மானுட விடுதலையின் மருந்து என்று உணர்ந்த செயல்பட்ட சிலி நாட்டின் இடதுசாரிக் கவிஞர். அவரது நினைவுக்குறிப்புகள் இவை.

நெரூடாவின் கவிதைகள் தமிழுக்கு வந்து பல ஆண்டகள் ஆகிவிட்டன. ஆனால் இந்த வரலாற்றுக் குறிப்புகள் முதன்முதலாக வந்துள்ளன. நெரூடாவின் கவிதைகளை வாசிக்கும் அனுபவத்தையும் இந்த நினைவுக் குறிப்புகளும் கிடைத்திருப்பது சா.தேவதாஸின் மொழி ஆளுமையைக் காட்டுகிறது.

ஒரு கவிஞன் சதா கவிதையை படைத்துக்கொண்டு மட்டுமே இருப்பவன் அல்ல. ஒரு கம்யூனிஸ்ட் எப்போதும் வர்க்க பேதம் பேசிக்கொண்டே இருப்பவனும் அல்ல… என்பதற்கு உதாரணமாக நெரூடா இருக்கிறார். அவருக்கு பொம்மைகளைச் சேகரிக்கப் பிடிக்கிறது. நத்தைகளையும் கிளிஞ்சல்களையும் ரசிக்கிறார்.

இப்படிப்பட்ட குழந்தை மனோபாவம் கொண்ட நெரூடாவைத்தான் சிறை பிடிக்கிறார்கள். நாடு கடத்துகிறார்கள். ஒதுக்கி வைக்கிறார்கள். எப்போதும் கண்காணிப்பிலேயே வைக்கிறார்கள். ட்ராட்ஸ்கி கொலையில் இவருக்கு பங்கு உண்டு என்று பழியும் போடுகிறார்கள்.

அனைத்தையும் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பேசகிறார். கவிதை வாசிக்கிறார். கலந்துரையாடல் செய்கிறார். நோபல் பரிசையும் பெறுகிறார். சோவியத் விருதுப் பட்டியலில் நெரூடா பெயர் ஏன் இல்லை? என்று ஸ்டாலினையும் கேட்க வைக்கிறார்.

சிலருக்கு அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்கள் வெகு சீக்கிரமாக அவர்களாலேயே சிதைக்கப்பட்டுவிடும். ஆனால் நெரூடா, இறப்புக்குப் பிறகும் உணர்ந்துகொண்டே சென்றதற்குக் காரணம், எந்த லட்சியத்தைப் பேசினாரோ அந்த லட்சியத்துக்காகவே உண்மையாக இருந்தார். தனிமனித வாழ்க்கையிலும் உண்மையைக் கடைப்பிடித்தார்.

தனக்குள் இருந்த எதிர்மறைப் போக்குகளை மறைக்காமல் எழுதியும் இருக்கிறார். மரணப் படுக்கையில் இருந்தபோதும், அவரை சி.ஐ.ஏ. விடாமல் துரத்தியது.

நெரூடாவின் வீட்டுக்குள் ராணுவம் நுழைந்தபோது சிரித்துக்கொண்டே சொன்னார்- நாலாப் பக்கமும் பாருங்கள். உங்களுக்கு அபாயகரமான ஒரே ஒரு பொருள்தான் இங்கே இருக்கிறது. அதாவது கவிதை என்றார். ஆம் இன்றுவரை அவரது கவிதை அடக்குமுறையாளர்களுக்கு அபாயகரமான பொருள்தான். அப்படிப்பட்ட நெரூடாவின் முழு வாழ்க்கையையும் அழகான மொழி நடையில் உணர்த்துகிறது இந்தப் புத்தகம்.

-புத்தகன்.

நன்றி: ஜுனியர் விகடன், 8/12/13.

தங்கத்தின் விலை ஏறுகிறதா? ஏமாற்றுகிறதா?

$
0
0

தங்கத்தின் விலை ஏறுகிறதா? ஏமாற்றுகிறதா?, மாரிக்கனி, ஒருலகம் பதிப்பகம், 75, முதல் மாடி, லேக் வியூ ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 60ரூ.

தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போகிறது. இதற்குக் காரணம் என்ன? தங்கத்தின் விலை குறைய வேண்டுமானால் அதற்கு என்ன வழி என்று விவரிக்கிறார் ஆசிரியர்.

 

—-

 

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை ரூ160.

ஔரங்கஜேப் (அவுரங்கசீப்) எத்தகைய குணம் உடையவர்? அவர் மீது வீண்பழிகள் விழக்காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்ததின் விளைவாக விளைந்த நூல். அவுரங்கஜேப்பின் மீது சுமத்தப்படுகின்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து அவர் ராஜபுத்திரர்களின் விரோதியா? சீக்கியர்களின் விரோதியா?

இசைக்கலைஞர்களை இம்சித்தவரா? இந்துக்களை இம்சித்தவரா? மதவெறியரா? ஆகிய தலைப்புகளில் விளக்கம் தருகிறது இந்த நூல். இந்து-முஸ்லிம்-கிறிஸ்தவ ஒற்றுமை வளர வேண்டும் என்றும், அதனைத் தடுத்திட முயலும் தீயசக்திகள் நாச நர்த்தனங்களை நாட்டுக்குப் படம் பிடித்துக் காட்டிட வேண்டும் என்ற நோக்கில் அகண்ட பாரதத்தின் வரலாற்றை ஆய்வு செய்திருக்கிறார்வ ரலாற்று ஆய்வாளர் செ. திவான்.

நன்றி: தினத்தந்தி,6/11/13

திருப்பதி

$
0
0

திருப்பதி, மஞ்சுள் பதிப்பகம், 2வது தளம், உஷா பிரீத் காம்ப்ளக்ஸ், 42, மாளவியா நகர், போபால் 462003, விலை ரூ 199.

உலகிலேயே மிக முக்கியமாகக் கருதப்படும் கோவில்களில் ஒன்றான திருப்பதி கோவிலின் தெய்வீக மற்றும் வரலாற்றுப் பின்புலத்தை விளக்கும் நூல். பூமியில் சில காலம் வாழ்வதென்று முடிவு செய்த வராகப் பெருமாள், தனது பட்சி வாகனமான கருடனை அழைத்து, சொர்க்கத்திலிருந்து தனது வசிப்பிடமான வைகுண்டத்தில் இருந்து தனக்குப் பிரியமான கிரீடாச்சல மலையை எடுத்து வந்து, தான் குறிப்பாகத் தேர்ந்தெடுத்த ஓர் இடத்தில் அதை வைக்குமாறு கட்டளையிட்டார்.

இந்த இடம்தான் திருப்பதி எனப்படுகிறது. திருப்பதி கோவிலில் நடத்தப்படுகின்ற பல்வேறு சடங்குகள் மற்றும் திருவிழாக்களைப் பட்டியலிடுவதோடு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு விஜயம் செய்யும் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்ற பல்வேறு வசதிகளையும் பட்டியலிடுகிறது.

கோவில் வளாகம் மற்றும் அதன் பிற அம்சங்களைப் பற்றிய ஒரு சுருக்கமான விவரிப்பும் இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கதைகளோடும் உண்மையான தகவல்களோடும் எளிமையாக உள்ள இந்த புத்தகம், அறிஞர்கள், பக்தர்கள் மற்றும் சாதாரண மக்களின் மனங்களைக் கவரும் வகையில் நூலாசிரியர் கோட்டா, நீலிமை ஆங்கிலத்தில் படைத்துள்ளதை தமிழுக்கு மொழி மாற்றம் செய்திருக்கிறார் நாகலட்சுமி சண்முகம்.

 

—-

 

குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை, ம.காமுத்துரை, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை2, விலை 70ரூ.

16 சிறுகதைகள் அடங்கிய நூல்.

நன்றி: தினத்தந்தி,6/11/13

மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி?

$
0
0

மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி?, மேயோ கிளினிக், அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், திருச்சி 6213130, விலை 40ரூ.

உடல்நலக்கல்வி சார்ந்த நூல்களை நலவாழ்வு எல்லோருக்கும் எனும் பிரிவின் கீழ் வெளியிட்டு வரும் அடையாளம் பதிப்பகத்தின் இந்த சிறு புத்தகம் மன அழுத்தத்தை சமாளிக்கும் வழிகளை முன்வைக்கிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற மேயோ கிளினிக் வெளியிட்ட நூலின் தமிழாக்கம்.

 

—–

 

ருசியின் ரேகை, நா.நாச்சாள், ஓம் பதிப்பகம், 15, ஆற்காடு ரோடு, வளசரவாக்கம், சென்னை 87, விலை 30ரூ.

கம்பு, சோளம், வரகு, சாமை, தினை என நாம் மறந்துவிட்ட சிறுதானியங்களை கொண்டு செய்யக்கூடிய உணவு வகைகளை விவரிக்கும் சிறு புத்தகம். நமது பாரம்பரியத்துடன் இணைந்த சிறுதானிய சமையல் ஆரோக்கியமானது என்ற கருத்தையும் வலியுறுத்துகிறது இந்த புத்தகம்.

 

—-

 

நேற்று இன்று நாளை, சோலை, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை 14, விலை 125ரூ.

பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரும்க விளங்கிய சோலை நக்கீரன் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அரசியல் சம்பவங்கள் குறித்த விமர்சன பார்வையோடு பல அரிய தகவல்களையும் கொண்டிருக்கிறது.

-இரா. நரசிம்மன், கவின்மலர்.

நன்றி; இந்தியாடுடே, 13/11/13


டால்ஸ்டாய் சிறுகதைகள்

$
0
0

டால்ஸ்டாய் சிறுகதைகள், டால்ஸ்டாய், ஆப்பிள் பள்ளிக் இன்டர்நேஷ்னல், (பி) லிட், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு, சென்னை 94, பக். 144, விலை 90ரூ.

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இலக்கிய நெஞ்சங்களில் பெரும் தாக்கத்தை உருவாக்கி, புதிய அதிர்வை, புதிய கோணத்திலில் கதைக்களம் உருவாக்கக் காரணமானவர் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்.

அவரின் வானவில்லை ஒத்த ஏழுவிதமான புதிய கதைகளைத் தொகுத்து வந்துள்ளது இந்நூல். நகைச்சுவையையும் வாழ்வியலையும் சேர்த்துக் கட்டியுள்ள இக்கதைகள் வாசிப்பவருக்கு ருசி கூட்டி வாழ்வில் தேடலைத் தூண்டி வரம் அளிக்க வந்த கதைகள் எனலாம்.

 

—-

 

உங்கள் குழந்தைகளும் நல்ல குழந்தைகளை, குருபிரியா, ஆப்பிள் பள்ளிக் இன்டர்நேஷ்னல், (பி) லிட், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு, சென்னை 94, விலை 50ரூ.

நமது குழந்தைகளை மாண்புமிகு மானிடராக்குவது எப்படி? என்ற வளர்ப்பு முறைகளை விவரிக்கிறது இந்த நூல். கு

ழந்தைகளை வளர்ப்பதற்கான எளிமையான வழிகளை சுவாரஸ்யமாக ஒன்பது தலைப்புகளில் விவரிக்கிறது. பெற்றோர்கள் கைவசம் இருக்க வேண்டிய இந்தக் கையேடு வீட்டு நூலகத்தில் வீற்றிருப்பது அவசியமானது.

-கருப்பன்.

நன்றி: கல்கி, 5/1/13

நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும்

$
0
0

நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும், முத்தாலங்குறிச்சி காமராசு, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 376, விலை 150ரூ.

தென் தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சி காலத்துக்கு முன்பே பாளையக்காரர்கள் என்ற பெயரில் ஜமீன்தாரி முறை அமலில் இருந்ததையும், நாயக்கர் ஆட்சிக்குப் பின் அது பலப்பட்டதையும் விரிவுபட்டதையும் நூல் எடுத்துரைக்கிறது.

இதில் பாண்டிய நாட்டுக்கு உள்பட்ட 72 பாளையங்களில் அன்றைய நெல்லை ஜில்லாவைச் சேர்ந்த சிவகிரி, நெற்கட்டும், செவ்வல், எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி,  உள்ளிட்ட 10 ஜமீன்களின் குறுநில மன்னர்கள் வாழ்ந்ததையும் வீழ்ந்ததையும் நூல் விளக்குகிறது.

ஊர்க்காடு ஜமீனின் சிறப்பம்சமான சிலம்பு வரிசையில் வஸ்தாரி கப்புத்தேவர் சரிசை, ஆளைக் கொல்லும் வஸ்தாரி ஐயங்கார் வரிசை, ஊத்துமலை ஜமீன் அரண்மைனையைக் குளிரூட்டுவதற்காக வெட்டப்பட்ட கால்வாய், எட்டையபுரம் மன்னர் பரம்பரையைத் தோற்றுவித்த நல்லம நாயக்கருக்கு எட்டப்பன் என்ற பெயர் வரக்காரணம், சிங்கம்பட்டி ஜமீன்தார் பெரிய சாமித் தேவர் நண்பனைக் காப்பாற்றுவதற்காக செய்த கொலைக்காக பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்டு தூக்குத்தேவர் ஆன வரலாறு, இந்தியாவில் பிரிட்டிஷாருக்கு எதிராக முதன்முறையாகப் போரைத் தொடங்கிய நெற்கட்டும் செவ்வல் குறுநில மன்னர் பூலித்தேவன் என பல சுவாரஸ்யங்கள் இந்த நூலை கீழே வைக்க விடாமல் படிக்க வைக்கின்றன.

அத்துடன் நெஞ்சை நெகிழவைக்கும் வகையில் சீறாப்புராணம் அரங்கேறிய சம்பவம், வீர பாண்டிய கட்டபொம்மன் மிகச் சிறந்த முருக பக்தனாகவும் விளங்கியதை விளக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம், தமிழ்ப் புலவர்களை ஆதரித்த ஊத்துமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பருக்கும் காவடிச்சிந்து பாடிய அருணாசலக் கவிராயருக்கும் உள்ள நட்பின் நெருக்கம் என மேலும் பல சுவையான தகவல்களையும் கூறுகின்ற இந்நூல், பல்வேறு திரைப்படங்களுக்கான கருவைச் சுமந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

நன்றி: தினமணி, 30/12/13.

விட்டு விடுதலையாகி

$
0
0

விட்டு விடுதலையாகி, வாஸந்தி, கவிதா பப்ளிகேஷன், தபால்பெட்டி எண்-6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17.

பாரதி தன் மனைவியைப் பார்த்துப் பாடியதாகக் கூறப்படும் பாடலின் தொடக்கம்தான் புதினத்தின் தலைப்பு. பல தலைமுறைகளுக்கு வேதனையும் அவமானமும் அனுபவித்த ஒரு குலத்தினரைப் பார்த்து, சிட்டுக்குருவியுடன் ஒப்பிட்டு பாரதி ‘விட்டு விடுதலையாகி நிற்பாய்’ என்று தார்மீக கோபத்துடன் ஆலோசனை கூறியிருக்கக்கூடும்தான்.

நாயகி கஸ்தூரி வாழ்வின் இறுதிக் கட்டத்தில் கிடக்கிறாள். அவங்க இறந்துட்டாங்கன்னா சாமி (இறைவன்) தீட்டு பார்க்கணும்கிறீங்களா? என்ற கோயில் காவலாளியின் கேள்விக்கு, ஆமாம் பெண்டாட்டி செத்தா தீட்டு காக்கற மாதிரி என்ற குருக்களின் வாக்கியத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் தன்மை புதினத்தில் அறிமுகமாகிறது.

கஸ்தூரி தாசி குலத்தில் பிறந்தவள். புதினத்தின் தொடக்கத்திலேயே தன் குலுத்தை மறுதலிக்கும் வகையில் கலகக் குரல் எழுப்புகிறாள் சிறுமி லட்சுமி. தன் புரட்சிப் பாதையை தானே தேர்ந்தெடுக்கும் தைரியம் அவளுக்கு இருக்கிறது.

புதினத்தின் இடைப்பகுதியில் முக்கியத்துவம் பெறும் திலகமும் தன் பாதையை தானே தேர்ந்தெடுக்கும் தைரியம் கொண்டிருக்கிறாள். இருவருமே தங்கள் குலத்தை ஒதுக்கும் முயற்சியில் செயல்படுகிறார்கள். ஆனால் சுயமாக நிற்க விழையும் தன்மையும் சார்ந்து நிற்கும் பாதையும் வேறு என்பதால் விளைவுகளும் நேரெதிராக அமைகின்றன.

மௌடிகமான துளசி, மகளின் வழக்கமில்லாத வழக்கமான கல்கி, மருத்துவப் படிப்பு போன்ற கோரிக்கைகளை உடனுக்குடன் ஏற்றுக்கொள்ளும் மிராசு ஆகியோரின் மகளாக சித்தரிக்கப்படும் லட்சுமி பாத்திரம் புரட்சியாளர் டாக்டர் முத்துலட்சுமியின் வார்ப்பு. இதன் காரணமாகவே கதைக்குரிய கற்பனை சுவாரசியங்களை அவரை வைத்து அதிகம் பின்ன முடியாமல் போவதை உணர முடிகிறது.

வாசகனின் திறமை மீது வாஸந்தி கொண்டிருக்கும் நம்பிக்கையைப் பாராட்ட வேண்டும். மூன்று தலைமுறை சரித்திர நிகழ்வுகள். அவை அடுத்தடுத்து விளக்கப்படாமல் ஒன்றோடொன்று பின்னியபடி நகர்கின்றன.

சில இடங்களில் ஒரே அத்தியாயத்தில் இருவேறு காலங்கள் இடம் பெறுகின்றன. ஒரு கதாசிரியராக கதையை மூன்றாம் நபர் கோணத்தில் விளக்கும் இந்தப் புதினத்தில் கதை மாந்தர்களில் ஒருத்தியே முதல் நபர் கோணத்தில் விவரிப்பதாகவு ஒரு தனி கதைப் பாதை இருக்கிறது. இவ்வளவு இருந்தும் தெளிவோடு கதையோடு ஒன்ற முடிகிறது என்பது எழுத்தாளரின் வெற்றிதான்.

தாசி சமூகம் என்றாலே கள்ள அந்தரங்க வாழ்வும் லயங்களில் ஆடப்பட்ட சதிர்க்காட்சியுமே பலர் மனதில் தோன்றும். ஆனால் மிராசுவின் விருப்ப நாயகி என்றாலும் தினமும் கொல்லைப்புறத்தில் நின்று யாசகம்போல் வீசிப் போடப்படும் உணவைப் பெற வேண்டிய கட்டாயம். சிங்காரத்தை விரும்பியும்கூட தனது போஷகரான ராஜாவை சரி செய்ய வேண்டிய கஸ்தூரியின் அவலம்.

தன் மேல்படிப்பு ஆசையை அம்மாவின் ரகசிய மணாளனிடம் பேசிவிட்டு நான் படுக்கப் போய்விடுகிறேன் என்று உறுதி அளித்துவிட்டு பேசத் தொடங்கும் லட்சமி. தாசி குல வாழ்வின் அவல நிதர்சனங்கள் அம்புகளாய் தைக்கின்றன.

கஸ்தூரி லட்சுமி ஆகியோரைவிடவும் அந்த இரு துருவங்களுக்கும் இடைப்பட்டு உள்ள திலகத்தின் வாழ்வு மற்றும் சாவு அதிக அதிர்ச்சியை உண்டாக்குகிறது.

கதைக்களனில் சுதந்திரப்போராட்டப் பின்னணி ஆங்காங்கே கதைக்கு வலு சேர்க்கும் விதத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. சிறுமி யோகு திருமணமானவுடன் கணவனை இழந்து, மழிக்கப்பட்ட தலை, நார் மடிப்புடவை என்று கோலம் தரித்திருப்பதைக் கண்டு லட்சுமி, என் குலம் படும் அவமானத்தைவிட இது அதிகக் கொடுமை என்று சாடுகிறாள்.

மையக் கதையுடன் வலிந்து திணிக்கப்பட்ட பாத்திரமாகக் தெரிந்தாலும், இதயமற்ற சமூகச் சூழல்களால், உயர்வாக நினைக்கப்ட்ட மற்றும் கேவலமாக நினைக்கப்பட்ட இரு ஜாதிகளிலுமே துவண்டு, புழுங்கிய பெண்கள் உண்டு என்பதை வெளிப்படுத்த இது உதவுகிறது.

ஒரு குலத்தின் வேதனைகளும் குறைகளும் சட்டத்தின் மூலம் தீர்க்கப்படும்போது, அந்தக் குலத்தின் அற்புதங்களும் கலைத் திறமைகளும் அவர்கள் பரம்பரையினரால் வலிந்து விலக்கப்படுவதை என்ன சொல்ல?

கலை வளர்ப்பதையே பாரம்பரியமாகக் கொண்ட ரத்தம் இன்று உறைந்து இறுகி எந்திர வாழ்வோடு ஐக்கியமாகிப் போனது துரதிஷ்டம்தான். புதினத்தைப் படிப்பவர்கள் பலவித அதிர்வுகளிலிருந்து விட்டுவிடுதலையாவது கடினம்.

நன்றி: இந்தியா டுடே, 1/11/13

மனசே மருந்து

$
0
0

மனசே மருந்து (மனநோய்க்கு மருந்தில்லா மருத்துவம்-ஹிப்னோதெரபி, டாக்டர் வேத மாலிகா, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை 17, பக். 240, விலை 150ரூ.

நம் மனதுக்கும், உடல்நலத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதை உணர்த்தும் வகையில் உடல் நலத்துக்கு மனசே மருந்து என்கிறது இந்நூல். இயந்திரமயமாகிவிட்ட இன்றைய அவசர யுகத்தில், போதிய ஓய்வின்றி, ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்து முடித்துவிட வேண்டும் என டென்ஷனாகிறோம்.

டென்ஷனைக் குறைக்க மாத்திரைகளை விழுங்குகிறோம். மனநோய்க்கு தொடர்ந்து தரப்படும் மருந்துகளே நரம்பு தளர்ச்சி போன்ற பல புதிய நோய்கள் தோன்றக் காரணமாக அமைகின்றன.

மனநோய்களை மருந்தின்றி, அதன் கொடுமைகளை மிகவும் கடுமையான பக்க விளைவுகள் இன்றி தீர்க்கக்கூடிய ஹிப்னாடிச மருத்துவம் எனும் ஹிப்னோதெரபி குறித்து விரிவாக விவரிக்கிறது இந்நூல்.

மருந்தில்லா மருத்துவம் எனப்படும் ஹிப்னோதெரபி சிகிச்சை முறைக்கும், மனவசியம் எனப்படும் ஹிப்னாடிசத்துக்கும் உள்ள வேறுபாடு, மனநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், வெளிப்பாடுகள், மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகள், ஹிப்னோதெரபியின் வகைகள், ஹிப்னோ தெரபி சிகிச்சையின் மூலம் மனநோயில் இருந்து மீண்டவர்களின் அனுபவங்கள் என மனநோய் பற்றியும் ஹிப்னோதெரபி குறித்தும் இந்நூல் விரிவாக விவரிக்கிறது.

பள்ளிப்பருவ குழந்தைகள்கூட தங்கள் வாழ்வை சில சமயம் டென்ஷனாக உணரும் இன்றைய நவீன யுகத்தில், நம் அனைவரின் வீட்டிலும் இப்புத்தகம் இருக்க வேண்டியது அவசியம் என்றால் அது மிகையாகாது.

நன்றி: தினமணி, 30/12/2013.

 

—-

 

சுற்றுலா மணமகிழ் விழாக்கள், வே. திருநாவுக்கரசு, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 125ரூ.

ஒவ்வொரு மாதமும் என்னென்ன விழாக்கள், எந்தெந்த ஊர்களில் நடைபெறும் என்ற விவரங்கள் உள்ளன. 12 மாதங்களில் நடைபெறும் 60 விழாக்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. இந்நூலை படிக்கும்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் விழாக்களை அறிந்து கொண்ட உணர்வு ஏற்படுகிறது.

நன்றி: தினத்தந்தி, 2/1/2014.

சிக்கலில் இந்திய விவசாயிகள்

$
0
0

சிக்கலில் இந்திய விவசாயிகள், பத்து வேளாண்மைப் பொருளாதாரக் கட்டுரைகள், அ. நாராயணமூர்த்தி, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை 14, பக். 81, விலை 50ரூ.

விவசாயிகளின் இன்றைய அவல நிலைக்கான காரணங்களை ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். விவசாயத்தின் பின்னடைவுக்குக் காரணம், அரசாங்கத்தின் தவறான பல்வேறு கொள்கைகளே என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவும் நூல்.

உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், விதைகள் போன்ற விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்களின் விலைகளை அரசு கட்டுப்படுத்துவதில்லை. அதே சமயம் உற்பத்தி செய்த பொருள்களின் விலையை விவசாயி நிர்ணயிக்க முடிவதில்லை. இதனால் விவசாயி இழப்புகளைச் சந்திக்க நேர்கிறது.

விவசாயி பாசனத்துக்குப் பயன்படுத்துகிற நீரை, தொழிற்சாலைகளுக்கும், நகரங்களும் குடி நீருக்காகவும் பயன்படுத்த அரசு அனுமதி அளிப்பது விவசாயிக்கு இழப்பு ஏற்பட இன்னொரு காரணம்.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தால் அந்நிய நிறுவனங்கள் தமக்குத் தேவையான பொருள்களை மட்டுமே விவசாயி உற்பத்தி செய்யச் சொல்லும். தொடர்ந்து ஒரே மாதிரியான பொருள்களை உற்பத்தி செய்வதால் நிலவளம் குறைந்துவிடும்.

அதிக அளவில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, பாதுகாத்து, அதிக விலைக்கு விற்று அந்நிய நிறுவனங்கள் சம்பாதித்துக் கொள்ளும். அதே சமயம், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் போகும் என இவை போன்ற இந்திய விவசாயம் சந்திக்கும் இன்றையப் பிரச்னைகளை இந்நூல் மிகவும் நுட்பமாகவும் ஆழமாகவும் விரிவாகவும் ஆராய்கிறது.

நன்றி: தினமணி, 30/12/2013.

 

—-

 

கடைசிக்கோடு, ரமணன், கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 80ரூ.

இந்தியாவின் வரைபடம் முதன் முதலாக 1806ம் ஆண்டு எவ்வாறு தயாரிக்கப்பட்டது? அதன் மூலம் இமயத்தின் உயரமான சிகரம் எவரெஸ்ட் என்பது எப்படி கண்டறியப்பட்டது? என்பது போன்ற பல தகவல்கள் நாவல் போல சுவைபட தரப்பட்டுள்ளன.

நன்றி: தினத்தந்தி, 2/1/2014

Viewing all 3876 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>